சினிமா செய்திகள்

குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலில் வழிபட்ட நடிகர் தனுஷ்

Published On 2025-09-27 11:30 IST   |   Update On 2025-09-27 11:30:00 IST
  • ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
  • கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.

நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள 'இட்லி கடை' திரைப்படம் வருகிற 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுசுடன், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண் விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தனது வாழ்நாளில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து எடுத்ததாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும் அப்போது ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று காலை பிரத்தியேகமான கேரவன் மூலம் நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமியை வழிபட வந்தார்.



கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த தனுஷ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Tags:    

Similar News