கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்: ஹாட்ரிக் அரை சதம் அடித்த 6வது இந்தியர் அபிஷேக் சர்மா
- அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரை சதம் அடித்தார்.
- ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன் விளாசினார்.
அடுத்து ஆடிய இலங்கை அணி பதும் நிசங்கா அதிரடி சதத்தால் 202 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன்னதாக, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஹாட்ரிக் அரை சதமடித்து அசத்தி உள்ளனர்.