டென்னிஸ்

செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் சிலி வீரர்
- செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் டபிலோ முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு ஆடிய லாரன்சோ முசெட்டி 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-6 (7-5) என வென்று சிலி வீரர் டபிலோ சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
Next Story