டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story