என் மலர்

    ஸ்பெயின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
    • சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.

    மாட்ரிட்:

    காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.

    அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
    • அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

    ஸ்பெயினில் ஒரு விமானம் புறம்படும் நேரத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

    இன்று, ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.

    புறப்படும் போது திடீரென தீ எச்சரிக்கை ஒலித்தது, இதனால் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

    இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதன்போது சுமார் 18 பேர் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்தது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.

    இதில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 1-6 என இழந்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றியது.

    அடுத்து நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.

    இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.

    இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.

    இதில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரான்சின் தியோ அரிபேஜ்-அர்ஜெண்டினாவின் கிடோ ஆண்ட்ரசி ஜோடியைச் சந்தித்தது.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருக்கிறது.
    • இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.

    இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை சந்தித்தது.

    முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றது. இந்தப் போட்டியில் பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 9 நிமிடம் மட்டும் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தின் மூலம் ஜானிடெப் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
    • தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    ஜானிடெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானிடெப் சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசிஜானிடெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிரிக்காவில் இருந்த ஐரோப்பிய பகுதிக்கு செல்ல ஸ்பெயின் தீவுக்கூட்டங்களை முக்கிய வழியாக பயன்படுத்துகின்றனர்.
    • அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    மொரோக்கா அருகே உள்ள ஸ்பெயினின் கேனரி தீவுக்கூட்டங்களின் துறைமுகத்தை நோக்கி சிறிய படகில் புலம்பெயர்ந்த ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. இந்த கும்பல் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள், 3 சிறுமிகள் என 7 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    சிறிய படகில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தது விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் மீட்புப்படை அதிகாரிகள் பெரும்பாலனவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்து கரையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது.

    ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய பகுதிகளுக்கு சட்டவிரோதமாக புலம்பெயரக் கூடியவர்கள் ஸ்பெயின் தீவுக்கூட்டம் கடல்வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ரப்பர் படகு மற்றும் சிறிய வகையில் படகு மூலம் ஆபத்தான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது இந்த விபத்தை சந்திக்கிறார்கள். இந்த விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என காஸ்பர் ரூட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×