டென்னிஸ்

மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாம்ப்ரி ஜோடி
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரான்சின் தியோ அரிபேஜ்-அர்ஜெண்டினாவின் கிடோ ஆண்ட்ரசி ஜோடியைச் சந்தித்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Next Story