டென்னிஸ்

மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 1-6 என இழந்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றியது.
அடுத்து நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்தது.
Next Story