வழிபாடு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
- 21ஆம் தேதி பக்தர்கள் தரிசத்திற்கான நடை திறந்திருக்கும்.
புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். 21-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குவதற்கு http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பை நதிக்கரையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story