என் மலர்

    கர்நாடகா தேர்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
    • நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

    தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.
    • தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பன்னாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீஸ்-வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.

    இது தமிழக-கர்நாடகா எல்லை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் நுழையும் வாகனங்கள் உயரமான மற்றும் அகலமான பாரங்களை ஏற்றி வந்தால் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று பண்ணாரி சோதனை சாவடி தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது.

    இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு லாரியை அங்கிருந்து நகர்த்தினர். இதன்பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது.
    • பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சிறுமிகளை போன்று சிறுவர்களுக்கு எதிராகவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கடந்த 2021-ம் ஆண்டு வெறும் 88 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 102 வழக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு (2023) கர்நாடகம் முழுவதும் சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 144 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டுக்கு, ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்குகள் வெறும் 34 மட்டுமே குறைவாகும். குறிப்பாக மாநிலத்தில் பெங்களூரு, உடுப்பி, ஹாசன் மாவட்டங்களில் தான் அதிகளவு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    அதன்படி, பெங்களூருவில் 15 வழக்குகளும், ஹாசன் மாவட்டத்தில் 11 வழக்குகளும், உடுப்பியில் 10 வழக்குகளும் மங்களூரு டவுனில் 5 வழக்குகளும், துமகூருவில் 6 வழக்குகளும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 7 வழக்குகளும், சிவமொக்காவில் 8 வழக்குகளும், சிக்பள்ளாப்பூர், கேலார், விஜயாப்புரா, ராமநகர், விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 வழக்குகளும், மற்ற மாவட்டங்களில் ஒன்று, இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் சிறுவர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், பள்ளி ஆசிரியர்களும், வீட்டு வேலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு உரிமையாளர்களும், சில நேரங்களில் பக்கத்து வீட்டு பெண்களும், உறவினர்களும் தான் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இன்னும் பாதிக்கப்பட்ட நிறைய சிறுவர்கள் புகார் அளிக்காமல் சம்பவத்தை மூடி மறைத்து விடுவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், இது ஒரு தீவிரமான விஷயமாகும். பாலியல் தொல்லைக்கு உள்ளாகுபவர்கள் யாராக இருந்தாலும், அதனை தடுக்க வேண்டியது அவசியம்.

    பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து உடனடியாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் எனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
    • கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில், எச்.டி. ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
    • மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நாயனகோளி செக்போஸ்ட் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் 1100 பீர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.77 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக போலீசார் மேற்கொண்ட ஆய்வில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்து காட்சியில் வாலிபர் ஒருவர் ஓட்டலுக்கு தலையில் தொப்பி மற்றும் முககவசம் அணிந்து வந்து ரவா இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பையை விட்டு விட்டு சென்றதும், அந்த பையில் இருந்து குண்டு வெடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.

    தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சந்தேக நபர் கர்நாடக மாநிலம் தும்கூரில் தலைமறைவாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 28 வாகனங்களில் போலீசார் தும்கூர் நகருக்கு இரவு சென்றனர்.

    பின்னர் தும்கூர் போலீசாருடன் இணைந்து இரவு முழுவதும் அங்குள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம், மாநகரட்சி வளாகம், மண்டிப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதனால் தும்கூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் வேட்பாளர்கள் முறையே 47, 46, 46 என வாக்குள் பெற்று வெற்றி பெற்றனர்.
    • பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களித்தார்.

    மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. போட்டி ஏற்பட்டுள்ள கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேரையும், பா.ஜனதா தலைமையில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை நிறுத்தியது. இதனால் போட்டி ஏற்பட்டது.

    பா.ஜனதா ஒரு இடத்தில் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.-க்கள் போதுமான வகையில் இருந்தனர். 2-வது வேட்பாளராக மதசார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியை நிறுத்தியது. 2-வது வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற ஒரு வாக்கு மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.

    பா.ஜனதா எம்.எல்.எ.ஏ சோமசேகர் என்பர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் மதசார்பற்ற ஜனதா கட்சியின் வேட்பாளர் தோல்வி உறுதியானது.

     ஜிசி சந்திரசேகர்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜனதா சார்பில் நாராயண்சா கே. பண்டேகே வெற்றி பெற்றார்.

     சையத் நசீர் ஹுசைன்

    அஜய் மக்கானுக்கு 47 எம்.எல்.ஏ.-க்களும், சையத் நசீர் ஹுசைனுக்கு 46 எம்.எல்.ஏ.-க்களும், ஜிசி சந்திரசேகருக்கு 46 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார்.
    • கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    பெங்களுர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வட இந்தியாவுக்கு மத்திய அரசு திருப்பி விடுவதால் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் தேஜஸ்வி சூர்யா, கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அசோகா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார். ஆனால் மறுபுறம் கட்சி எம்.பி. பாரத் டோடோ என்று அழைக்கிறார். இந்திய பிரிவினைக்கு வழிவகுத்த காங்கிரசின் அதே எண்ணம் இது தான். இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட எம்.பி. இந்தியாவை பிளவுபடுத்த அழைப்பு விடுத்து உள்ளார் என்று தெரிவித்தனர்.

    இந்த நிலையில் டி.கே. சுரேஷின், மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், வருவாயில் நியாயமான பங்கை பெறாத மக்களின் ஏமாற்றத்தையே சுரேஷ் பிரதிபலிக்கிறார். நாம் அனைவரும் இந்திய அன்னையின் குழந்தைகள், நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.


    தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு பெருமைமிக்க இந்தியன் மற்றும் பெருமைமிக்க கன்னடியன், தென்னிந்தியா மற்றும் குறிப்பாக கர்நாடகா நிதி விநியோகத்தில் அநீதியின் கொடூரத்தை எதிர் கொண்டுள்ளன. 2-வது பெரிய ஜி.எஸ்.டி. பங்களிப்பு மாநிலமாக கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    இது அநீதி இல்லை என்றால் பிறகு என்ன என்று கூறியுள்ளார். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், எங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி தேவை, வளர்ச்சி பணிகளுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் நிதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பெருமைமிக்க இந்தியர் மற்றும் காங்கிரஸ்காரர் என்று டி.கே. சுரேஷ் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு அநீதிக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன், எதுவாக இருந்தாலும் ஜெய்ஹிந்த், ஜெய் கர்நாடகா என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல்.
    • லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எம்பி பாட்டீல் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

    பரமேஸ்வர்: இவர் துமகூர் மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தவர். 7 ஆண்டு வரை கர்நாடகா மாநில தலைவராக செயல்பட்டார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர் தான் மாநில தலைவராக இருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பரமேஸ்வர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்த முறையும் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளராக இருக்கிறார்.

    கேஎச் முனியப்பா: இவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் 7 முறை எம்பியாக இருந்துள்ளார். மத்திய மந்திரியாக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2019 தேர்தலில் கோலார் பாராளுமன்ற தொகுதியில் தோற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

    ராமலிங்க ரெட்டி: இவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் தொகுதியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்து துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2013-2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாகவும், பெங்களூர் பொறுப்பு மந்திரியாகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

    கேஜே ஜார்ஜ்: இவர் பெங்களூரு சர்வக்ஞ நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 ல் வெற்றி பெற்ற நிலையில் 4-வது முறையாக இப்போது ஜெயித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இதற்கு முன்பும் சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூரு நகர வளர்ச்சி துறை, உள்துறை மந்திரியாக செயல்பட்டு இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜமீர் அகமது கான்: பெங்களூரு சாம்ராஜ் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஜே.டி.எஸ். கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரசில் இணைந்து 2018-ல் வென்றவர். இந்த முறையும் வெற்றிபெற்று மந்திரி ஆகி உள்ளார்.

    எம்.பி. பாட்டீல்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். இவர் இந்த தொகுதியில் 4-வது முறையாக தொடர்ந்து ஜெயித்துள்ளார். இவர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சதீஷ் ஜார்கிகோளி: இவர் பெலகாவி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார். இவர் மற்றும் இவரது 3 சகோதரர்கள் அரசியலில் உள்ளனர். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக இருந்தார்.

    பிரியங்க் கார்கே: இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக இருந்தார். இன்று பதவி ஏற்ற மந்திரி சபையில் இவர் மிகவும் குறைந்த வயது மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது.
    • சசிகாந்த் செந்திலை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி கொடுத்தார். இவர் ஏற்படுத்திய '40 சதவீத கமிஷன் கவர்மெண்ட்' என்ற கோஷம் பாரதிய ஜனதாவுக்கு மரண அடியாகவே மாறிப்போனது. இதுதவிர ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு கேள்வியை இவர் கேட்க வைத்தார்.

    அவை அனைத்துக்கும் பாரதிய ஜனதா தலைவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. பிரசாரத்தை அனைத்து வகையிலும் சமாளித்ததோடு காங்கிரசுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்க செய்ததில் 100 சதவீதம் வெற்றி பெற்றார். இதனால் இவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    அதற்காக சசிகாந்த் செந்திலும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கேற்ப செயல்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியும்' என்று கூறி இருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
    • கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.

    கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.

    நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.

    நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    ×