என் மலர்

    கோயம்புத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணேசன் அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.
    • கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் தசரா பட்டியை சேர்ந்த கணேசன் (46) என்பவர் உடுமலையில் நடந்த அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.

    இன்று காலை அவர் அடைக்கப்பட்டு இருந்த ஜெயில் அறையில் அவர் மயங்கி கிடந்தார். சிறைகாவலர்கள் இதுகுறித்து கோவை மத்திய சிறை ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது.
    • கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது.

    கோவை:

    நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில் ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.

    கோவை-பாலக்காடு இடையிலான ரெயில் வழித்தடத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு லைன்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

    தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு யானைகள் மீது மோதாமல் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவி வருகிறது.

    இந்தநிலையில் மதுக்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் அருண் மற்றும் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்களான பழங்குடியின பணியாளர்கள் உடனிருந்தனர்.

    தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பு நிறுவியது முதல் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பாதையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு யானைகள் கடந்து சென்று வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து நாட்டிலேயே முன்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி வருகிறது என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார்.
    • கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் பட்டணம் புதூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அந்த பணியை விட்டு சொந்த ஊரில் வந்து குடியேறினார். இங்கு அவருக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயத்தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.

    சமீபகாலமாக கிருஷ்ணகுமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சங்கீதாவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சங்கீதா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதன்பிறகு கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார். பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியில் கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அங்கு அவர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இன்று காலை கிருஷ்ணகுமார் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு சங்கீதா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது மனைவியை சுட்டுக் கொன்ற கிருஷ்ணகுமார் கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட விவரமும் தெரியவந்தது.

    இதையடுத்து சங்கீதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் தோட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஆத்திரத்தில் அந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    சுட்டுக் கொல்லும் அளவுக்கு கணவன்-மனைவி இடையே என்ன பிரச்சனை இருந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளும் வீடு திரும்பியதும் பெற்றோரை எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் கண்ணீர் வடித்தபடி கலங்கி நின்றனர்.

    இந்த சம்பவம் சூலூர் பட்டணம் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார்.
    • தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு கோவை வந்தார்.

    நேற்று காலை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் மாலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா மையத்துக்கு சென்றார். அங்கு நடந்த மகாசிவராத்திரி விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள சூர்யகுண்டம், நாகசன்னதி, லிங்கபைரவி கோவிலுக்கு சென்று வணங்கினார். தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.

     

    பின்னர் ஆதியோகி சிலை முன்பு யாகவேள்வியை நெருப்பு மூட்டி மகாசிவராத்திரி விழாவை தொடங்கிவைத்தார். சில மணி நேரம் அங்கிருந்த அமித்ஷா, இரவில் ஈஷா யோகா மையத்தில் உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.
    • அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கல்வி நிறுவனங்கள் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியிலும், இன்னும் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழங்குவதை தடுக்கவும், கல்லூரி மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் அவ்வப்போது, மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உதவி போலீஸ் கமிஷனர் வேல்முருகன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 6 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த போலீசார் கதவை தட்டினர்.

    அவர்கள் கதவை திறந்ததும், உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த பேக்குகள், சூட்கேஸ்கள், அலமாரிகள், கட்டில்கள், குப்பைத்தொட்டிகள், என அனைத்திலும் சோதனை நடத்தினர்.

    அறையில் ஏதாவது தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் கஞ்சா ஏதாவது மறைத்து வைத்துள்ளனரா? எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

    தொடர்ந்து மாணவர்களிடம், அவர்களின் பெயர், சொந்த ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
    • தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரெயில்நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் இந்தியை எதிர்த்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தும் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை ஊர்வலமாக அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழம் வழங்கி போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்துக்கு தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல்செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா" போன்று நடைபெறுகிறது எனப் புகழாரம் சூட்டினார். 

    இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

    சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.

    இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

    பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது.

    ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.

    இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

    நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்கள். 

    சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின்போது அவரோடு நானிருந்தேன். சத்குரு உங்களை பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன். நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

    மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.

    அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி.

    தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மகா சிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு.

    சத்குரு இந்த மகா சிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசினார். இதில் அவர்," நம்முடைய உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார்.

    காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். ஆர்டிக்கிள் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள்.

    நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு நன்றி.

    இன்று மகா சிவராத்திரி எந்த ஜாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்னிடம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மஹாசிவராத்திரிக்கு வரலாமா எனக் கேட்டார், அதற்கு நான் கூறியது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது.

    மனிதர்கள் மட்டுமே மஹாசிவராத்திரிக்கு வர முடியும் என பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களில் வர உள்ளார்" என்றார்.

    மேலும், ஆதியோகி முன்பு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்த கயிலாய மலை போன்ற அரங்கமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலியை சத்குரு வெளியிட்டார்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் 300 கோடி மக்களை தியானத்தில் ஈடுபடுத்தினால் உலகளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நள்ளிரவு சந்தியா கால நேரத்தில் சத்குரு திருவைந்தெழுத்து மஹா மந்திர தீட்சையினை வழங்கி சக்திமிக்க தியானங்களை வழி நடத்தினார். 

    ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித் ஷா அவர்களை சத்குரு சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்து சென்றார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டார்.

    ஈஷா புராஜக்ட் சமஸ்கிருதி குழுவினரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

    மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் மக்களை இரவு முழுவதும் விழிப்புடன் வைத்திருந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் ஆகியோர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார்.
    • ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார். மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்தும், திரைத்துறை உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.

    பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.

    இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2004-2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது தமிழகத்திற்கு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
    • மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    * கோவை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    * உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்ற வர்த்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.

    * பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார்.

    * 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியோடுதான் தொடங்க போகிறது.

    * தமிழ்நாட்டில் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.

    * 2026-ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி உருவாவது உறுதி.... உறுதி...

    * வகுப்புவாதம், பிரிவினை வாதம் சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    * பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனித்துவமான முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.

    * தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களில் மொழி வளம், கலாசாரம் உள்ளிட்டவைகளை போற்றக் கூடிய மபெரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.

    * தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.

    * வேங்கைவயலில் ஒரு சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது.

    * கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. கள்ளக்சாரயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என புகார் அளிக்கும் கல்லூரி மாணவர்கள் திடீரென கொள்ளப்படுகிறார்கள்.

    * இப்போது தேச விரோத சிந்தனை மட்டும்தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது.

    * கனிம வளக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் உதவியுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தலைவர் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் பணமோசடி வழக்கு மற்றும் செம்மணல் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.

    * யார் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடித்தான் திமுக உறுப்பினர்களாக சேர்க்கும்போல் இருக்கிறது.

    * ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரம் அடைந்திருக்கிறது. துன்பத்தில் இருக்கிறது. இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது புதல்வர் புதுபுது பிரச்சனையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    * தற்போது நீங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஒரு புதிய பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பாராளுமன்ற இடங்கள் குறையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார். இந்த விசயத்தில் பொய் சொல்லி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். இழப்பு ஏற்படும் எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது. நான் உண்மையை உரைத்திருக்கிறேன். எனக்கு பதில் சொல்ல் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    * 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியமாக 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.

    * கட்டுமான பணிகளுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே, மத்திய அரசு நிதி தரவில்லை என மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு உண்மையான துரோகம் செய்துள்ளீர்கள். மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
    • மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.

    கோவை:

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    * தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது எப்படி நடக்கம் என அமித்ஷா தெளிவாக விளக்கி உள்ளார்.

    * விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.

    * முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?

    * ஏற்கனவே பிரதமரும் விளக்கமாக பேசி உள்ளனர்.

    * தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?

    * முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?

    * மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.

    * விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை, விஜய் குழந்தைகளுக்கு மும்மொழி.

    * த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா? விஜய் மேடையில் பொய் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
    • வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.

    கோவை:

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று காலை செல்வபுரம்-சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திருநகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, லதா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி, அதனை சரிபார்த்தனர்.

    மேலும் வங்கி கணக்கில் உள்ள பணம், வீட்டில் இருந்த நகைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள் அது தொடர்பாகவும், எம்.எல்.ஏ.விடம் கேட்டனர். அவர் அதற்கான தகுந்த ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.

    சோதனையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.

    சோதனை நடப்பதை அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இேதபோன்று, பெரியநாயக்கன் பாளையத்தில் அம்மன் அர்ச்சுனன் நடத்தி வரும் நிறுவனம் மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்குள்ள கம்ப்யூ ட்டர்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.

    அம்மன் அர்ச்சுனன் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவாகியும் நீடித்தது. இரவு 7.40 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இதேபோல் நிறுவனங்களில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.

    13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த போலீசார் அதனை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே லஞ்ச ஒழிப்புசோதனையில் தனது வீட்டில் எந்த பொருளையும் அதிகாரிகள் எடுத்து செல்ல வில்லை என அம்மன் அர்ச்சுனன் பேட்டி கொடுத்துள்ளார்.

    எனது வீட்டில் நடந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது. ரூ.2 கோடியே 6 லட்சம் எனது வங்கி கணக்கில் உள்ளது. 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதற்கான அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன்

    எனது வீட்டில் 2 மணி நேரம் தான் சோதனை நடந்தது. 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் இருந்தார்கள். அனைத்தும் சட்டப்படியாக சரியாக இருந்தது. வருமானவரித்துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருக்கிறது.

    எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.

    அ.தி.முக தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். என்னிடம் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

    எனக்கு நடந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

    இந்த வழக்கை நான் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன். இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க. தொண்டனை அசைத்து பார்க்க முடியாது. உங்களுக்கு அச்சம் வந்ததால் சோதனை செய்கிறீர்கள். அ.தி.மு.க தொண்டர்கள் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார். அதன்பின், ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.

    மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ×