என் மலர்

    நீங்கள் தேடியது "கெனிஷா பிரான்சிஸ்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.

    இப்போட்டியை நடிகர் ரவி மோகன் - கெனீஷா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.

    ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    இந்த விழாவில் ரவி மோகன் கூறியதாவது "என்னுடைய குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் சமீபத்தில் என் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழும்பியது. என் சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த பணம் , சொத்து எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. என் உண்மையான சொத்து என்றும் நீங்கள் தான், குடும்பம், நண்பர்கள் மட்டுமே. இந்த சொத்தை யார் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். என்ன வாழ்த்த வேண்டாம்-ன்னு சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான், இங்கதான் இருப்பேன் வளர்ந்துட்டே இருப்பேன். நன்றி" என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.

    மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்தது. இந்நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா அவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிப்பட்டனட். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
    • ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

    நடிகர் ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனை கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    சமீபத்தில் ரவி மோகனுக்கும் அவரது மனைவியான ஆர்த்திக்கும் இடையே கருத்து முரண்பாடு மற்றும் மன கசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ரவி மோகன்  அவரது காதலியான கெனிஷா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் மகன்களை சந்தித்தார். அப்புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.
    • மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.

    பல்வேறு சர்ச்சைக்கு நடுவிலும் ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் கூட சென்னையில் நடந்த ரூ.3 கோடி பரிசுக்கான சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

    தனித்தனி காரில் வந்து இறங்கினாலும், நிகழ்ச்சியில் ஒன்றாகவே பேசி சிரித்து கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ரவி மோகன் பேசும்போது, கிரிக்கெட் தொடர்பான தகவல்களை மட்டும் குறிப்பிட்டார். மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
    • மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என வழக்கை தொடர்ந்தார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து அவர்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு வந்தனர்.

    இதுதொடர்பான அறிக்கையை இனிமேல் விடக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் ரவி மோகன் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் ரவி மோகனின் திருமண சர்சையை குறித்த அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ள அனைத்து போஸ்டுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அது ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
    • இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனீஷா பகிர்ந்துள்ளார்

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.

    இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், ரவிமோகன் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனிஷா பகிர்ந்துள்ளார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்.

    இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இந்நிலையில் ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என உத்தரவு விடுத்துள்ளது. மனு மீதான விசாரணையின் போது இருதரப்பும் அமைதியாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவி மோகனின் மாமியார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.
    • இந்த காலத்தில்.கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது.

    நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக சுற்ற தொடங்கியதில் இருந்து அவர்களை பற்றிய சர்ச்சைகள் பெரியளவில் வெடித்துள்ளது.

    ஒருபக்கம் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, மறுபுறம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரவி மோகன் மற்றொரு அறிக்கை வெளியிட்டார்.

    அதேவேளை ரவி மோகனின் மாமியார் வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், ரவிமோகனும், ஆர்த்தியும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த சர்ச்சைக்கு நடுவில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ''இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன.

    இப்போதுள்ள சூழலில் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது'', என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பாடகி கெனிஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டுவந்தார் என்பதே உண்மை.

    * சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.

    * எங்கள் வாழ்வில் 3-வது நபரின் வருகையை வெற்றுக் குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரத்துடன் தான் கூறுகிறேன்.

    * கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில்.

    * என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.

    * என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.

    * எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.

    * துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
    • என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன் என்று நடிகர் ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நாங்கள் எப்போதும் உங்களை கதாநாயகனாகவே பார்த்து வருகிறோம். நீங்கள் சொல்லும் அடுக்கடுக்கான பொய்களால் அந்த நிலையில் இருந்து தரம் தாழ்ந்து போகவேண்டாம். இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன் என்று நடிகர் ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.

    இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், பாடகி கெனிஷா மீதும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில், பாடகி கெனிஷா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது; என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது.

    என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன்.

    நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது என கூறியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா என்று ரவி மோகன் தெரிவித்தார்.
    • என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார்.

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

    இந்நிலையில், ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம், கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தை பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்.

    கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன் ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

    இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கை கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

    அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

    இப்பொழுது ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன்.

    அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை கவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன் இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.

    சைரன் பட வெளியீட்டின் போது கூட ஜெயம் ரவி அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. மேலும் ஜெயம் ரவி அவர்கள் எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குனரை தேர்வு செய்து அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார் எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நான் செய்தேன்.

    ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஜெயம் ரவி அவர்களை இதை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்பதற்காக மட்டுமே ஒரு தயாரிப்பாளராக அல்ல தாயாக பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல.

    ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம்,ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை,

    இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.
    • தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை.

    * மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல.

    * இவ்வளவு நாள்களாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்.

    * அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.

    * என் பிரச்சனைகள் அனைத்தும் கெனிஷாவுக்கு தெரியும்.

    * எனது குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர்.

    * தனது குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கின்றனர்.

    * மனைவியை பிரிந்ததில் இருந்து குழந்தைகளிடம் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறேன்.

    * தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.

    * காரை பழுதுபார்க்க இழப்பீட்டிற்கு எனது கையெழுத்து தேவைப்பட்ட பொழுதே விபத்து குறித்து தெரிய வந்தது.

    * பொன் முட்டையிடும் வாத்தாகவே நான் பார்க்கப்பட்டேன், ஒரு கணவனாக நான் மதிக்கப்படவில்லை.

    * காதல் என்ற போர்வையில் பெற்றோர், குழந்தைகளுடான பந்தம் என அனைத்தும் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    * ஆர்த்தி செய்த ஆடம்பர செலவுகளால் தான் கடனாளி ஆனேன். 5 ஆண்டாக நான் சம்பாதித்த தொகை பெற்றோருக்கு தரப்படவில்லை.

    * தனது காயங்களை உணராமல் பலர் தனது கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×