என் மலர்

    ஆஸ்திரேலியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் இந்த எரிஸ் ராக்கெட் ஏவப்பட்டது.
    • ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

    ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.

    கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும். இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.

    ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
    • சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.

    இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.

    YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.

    டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.

    சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.

    குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.

    எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டார்.

    வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்தது.

    நகரின் லைட் ஷோவை பார்க்க 23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் வந்திருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.அவர் மயக்கமடைந்த பிறகு காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதலை படம் பிடித்துக் கொண்டிருந்த சரண்ப்ரீத்தின் மனைவியையும் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1929ஆம் ஆண்டுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
    • சில இடங்களில் இன்னும் 30 செ.மீ. மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுயைாக பாதிக்கப்பட்டுள்ளன.

    அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 30 செ.மீ. மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தள்ளது. நாங்கள் இன்னும் மோசமான செய்திக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என மாநில தலைவர் கிறிஸ்டோபர் மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    50 ஆயிரமம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ார். 1921 மற்றும் 1929 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மாயமாகியுள்ளனர். 500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.

    கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    2007 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தோணி அல்பானீஸ் அமைச்சரானார். ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவர் கெவின் ரூட்டின் குறுகியபதவிக் காலத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.

    2019 ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்விக்குப் பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். பத்து ஆண்டுகால லிபரல்-தேசிய கூட்டணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 2022 இல் அவர் பிரதமரானார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் ஆடுகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகள் அடிலெய்டு (அக்டோபர் 23), சிட்னியில் (அக்டோபர் 25) நடைபெறுகிறது.

    டி20 ஆட்டங்கள் கான்பெர்ரா (அக்டோபர் 29), மெல்போர்ன் (அக்டோபர் 31), ஹோபர்ட் (நவம்பர் 2), கோல்டுகோஸ்ட் (நவம்பர் 6), பிரிஸ்பேன் (நவம்பர் 8) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா செல்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
    • இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.

    நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.

    பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
    • வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் ஷீட்டில் அவர்களின் தோற்றத்துக்கு மதிப்பெண் கொடுத்து வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (43). ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.

    இதற்கிடையே போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர். அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் சீட் ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள், அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பெண் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் அவரது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
    • தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

    ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

     

    அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.

    இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

    அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
    • அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

    அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.

    எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள்.
    • உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது:

    விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.

    இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.

    உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.

    சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.

    விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.

    இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

    விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    ×