என் மலர்

    பெரம்பலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள்.
    • உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்த நிலையில் பொதுமக்களிடையே பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தை நான் எழுச்சி பயணத்தில் மேற்கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. நமது வேட்பாளர் வெற்றிபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியாக பார்க்கிறோம். அந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சி பார்க்கப்படுகிறது.

    திமுக ஆட்சி எப்போது அகற்றப்பட வேண்டும் என்ற நிலைலேயே மக்கள் இருக்கின்றனர். திமுக 200 தொகுதிகளின் வெற்றிபெறும் என்பதை கனவு காண்கலாம். ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

    திமுக ஆட்சி அமைத்து 50 மாதங்கள் உருண்டோடிவிட்டது. இந்த 50 மாதங்களில் குன்னம் தொகுதிக்கு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்ட வந்திருக்கிறார்களா? 50 மாதங்களில் மக்களை தந்திரமாக ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

    மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அவர் கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். சொந்த பணத்தில் கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கடுமையான அழுத்தம் கொடுத்ததால் 28 மாதங்கள் கழித்து மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்ததாக தவறான கருத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

    மேலும் 30 லட்சம் பேருக்கு வழங்கப்படும் எனக் கூறுகிறார். மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. அவருக்கு 30 லட்சம் குடும்பத்தினருடைய வாக்கு வேண்டும். அதனால் கொடுப்பதாக சொல்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு 10 சதவீதம் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியுள்ளனர்.

    100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார். சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினார். உயர்த்தினாரா? 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக தேய்ந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

    கண்ணில் பார்க்க முடியாத காற்றை வைத்து ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். நாட்டுக்கு நன்மை செய்வோம் என்று இவர்கள் பேசுகிறார்கள். இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்த காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வாடிக் கொண்டிக்கிறார்கள்.

    1.05 கோ பேரிடம் மனு வாங்கப்பட்டு 1.01 லட்சம் மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக சொல்கிறார்கள். என்னென்ன மனுக்கள் கொடுக்கப்பட்டன? எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது? என விளக்கம் கொடுங்கள். விளக்கம் கொடுக்கப்பட வில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு இப்படி தவறாக புள்ளி விவரங்கள் கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாகத்தான் அரசு செய்திகள் வெளியிடப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. செல்வாக்கை இழந்ததால் எப்படியாவது மக்களை குழப்பி, ஆட்சி வர வேண்டும். திட்டமிட்டு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார்.

    ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரிகளாக இருந்து கொண்டு தவறான புள்ளி விவரங்களை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள். அதற்கு முழு பொறுப்பு நீங்கள்தான் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் தேரை இழுத்தபோது சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
    • அருகில் இருந்த தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

    பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ள கருப்பசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்ததும், பக்தர்கள் தேரை இழுக்க முயன்றனர். அப்போது ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.

    இதனால் தேர் அருகில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் பக்தர்கள் பீதி அடைந்தனர். சாய்ந்த தேர் அருகில் உள்ள தேர் மீது மோதி அப்படியோ நின்றதால் தரையில் விழவில்லை. தரையில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    அருகில் உள்ள தேரில் சாய்ந்து நின்றதும் தேர் அருகில் இருந்து போலீசார் மற்றும் பக்தர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார்.
    • விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    குன்னம்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).

    பாலபிரபு தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கவுரி சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கோடை விடுமுறையை தொடர்ந்து பாலபிரபு குடும்பத்துடன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் சென்றார். ஜூன் 2-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் சென்னை புறப்பட ஆயத்தம் ஆகினர்.

    நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். காரை பாலபிரபு ஓட்டினார். கார் இன்று காலை திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. பெருமாள் பாளையம் பூமாலை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சாலையோரத்தில் நின்ற புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாலபிரபு, மாமனார் கந்தசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை கவிகா, தாய் டாக்டர் கவுரி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சில நொடிகளில் குழந்தை கவிகா உயிர் பிரிந்து விட்டது. அதன் பின்னர் கவுரியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
    • இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.

    இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குன்னம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.

    லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடந்த சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. தார் ஊற்றி அழித்தாலும் நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் இந்தி மொழியை அழிக்க முடியாது. பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு எந்தவொரு சிறந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்று தி.மு.க. எடுத்துக்கொள்கிறது. அது போல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்க்கிறது.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநில தலைவரும், தேசிய தலைவர்களும் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். பா.ஜ.க மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை வரும்போது அவரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.

    பெரம்பலுார்:

    பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 36), மணிகண்டன் (35) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை கை.களத்துார் ஏட்டு ஸ்ரீதர் சமாதானப்படுத்தினார்.

    பின்னர் மணிகண்டனை அவரது வீட்டிற்கு ஸ்ரீதர் அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த தேவேந்திரன், மணிகண்டனை போலீஸ் கண்ணெதிரே வெட்டிக் கொன்றார். இதையறிந்த மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார், எஸ்.பி. ஆதர்ஷ்ப சேரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இது குறித்து மணிகண்டன் மனைவி மீனா (25) கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மணிகண்டனின் மனைவி மீனாவிற்கு அரசு சார்பில் முதற்கட்ட நிதி உதவியாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரித்து கை களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொளஞ்சியப்பன், மணிவேல், குமார் ஆகியோரை ஆயுதபடைக்கும், சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றி உத்தரவிட்டார்.

    கை.களத்துார் ஸ்டேஷனில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு 2 சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுதே ஒரு தரப்பை சேர்ந்த தேவேந்திரன் மற்றொரு தரப்பை சேர்ந்த தொழிலாளி மணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அங்கு கூடி இருந்தவர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். மேலும் அங்கு மோதல் அதிகரிக்கும் சூழல் உண்டானது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கபப்ட்டனர்.

    இதனை தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாடபுரம் மயிலூற்று அருவி பிரசித்தி பெற்றது.
    • அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்துடன் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, தொண்டமாந்துறை அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை உள்ளன.

    அதுப்போல லாடபுரம் மயிலூற்று அருவியும் பிரசித்தி பெற்றது. லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சை மலையில், பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துத் தொங்க விட்டது போல் காணப்பட்டதால் இந்த அருவிக்கு மயிலூற்று அருவி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

    லாடபுரம் அருவிக்கு லாடபுரத்தில் இருந்து, சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3 கிமீ தூரம் சென்றபிறகு 10 நிமிடத்தில் பால்போல் கொட்டும் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பட்டியலின்படி லாடபுரம் மயிலூற்று அருவி மலையேற்ற பாதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பெரம்பலூர் வனச்சரகம், மயிலூற்று அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் கரடு முரடான மலைப்பாதை வழியாக மேலே ஏறிச்செல்லும்போது நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படலாம்.

    மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அருவிப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வரும்போது அபாயகரமான நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி உள்ளே செல்பவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 22 (டி)-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இப்போது சாலையில்‌ செல்லும்‌ 10 கார்களில்‌ 8 கார்கள்‌ தமிழக வெற்றி கழகத்தின்‌ கொடிகளைக்‌ கட்டி செல்கின்றன.
    • இன்னும்‌ 16- 17 மாதங்கள்‌ கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும்‌.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பேசினார்.

    தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உலகமே உற்று நோக்கி வந்த நிலையில் ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் விஜய் தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் அவர்தான். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18. மாதங்கள் மட்டுமே உள்ளன. 2026-ல் முதலமைச்சர் இடத்தில் விஜய்யை உட்கார வைப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.

    நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனை செயல்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களுக்காக நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

    இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன. இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது விஜய்தான். இனி வரும் காலங்களில் இது போன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளது.

    அதற்கும். தொண்டர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். வருகிற 16, 17,23,24-ந் தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம் முகாம்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும்.

    இது போன்ற விஷயங்களுக்கு மக்களுக்கு உதவுவதோடு மக்களோடு மக்களாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொறு தொகுதிக்கும் விஜய் வர உள்ளார். அப்போது நம் கட்சியினர் மக்களுக்கு செய்த உதவிகளை அவரிடம் தெரிவிக்கும் வகையில் உதவ வேண்டும்.

    இன்னும் 16- 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விஜய் படத்தை வைத்து உள்ளாட்சிகளில் 127 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், துணைத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளோம். தற்போது கட்சியாக ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
    • முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

    விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.

    அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.

    எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

    வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.

    அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

    பெரம்பலூர்:

    மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.

    கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.

    இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்ட ஆடிப்பட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

    விதைத்து 2 மாதம் ஆகிய பயிர்கள் 2 அடி உயரம்வரை வளர்ந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்த காரணத்தாலும் கடந்த ஓரிரு வாரங்களாக மக்காச்சோளப் பயிர்கள் கருகத் தொடங்கின.

    இதனால் கவலையடைந்த விவசாயிகள் இனிமேல் மழை பெய்தாலும் மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் வயல்களில் டிராக்டரை உழவு ஓட்டி மக்காச்சோளப் பயிர்களை அழித்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயி ஒவர் கூறும்போது,

    கை.களத்தூர், காரியனூர், நெற்குணம், பாதாங்கி, மரவநத்தம், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் இவ்வாறு உழவு ஓட்டி அழிக்கப்பட்டன.

    மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

    எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    ×