பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்த நிலையில் பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கூட்டத்தை நான் எழுச்சி பயணத்தில் மேற்கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. நமது வேட்பாளர் வெற்றிபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியாக பார்க்கிறோம். அந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சி பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சி எப்போது அகற்றப்பட வேண்டும் என்ற நிலைலேயே மக்கள் இருக்கின்றனர். திமுக 200 தொகுதிகளின் வெற்றிபெறும் என்பதை கனவு காண்கலாம். ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.
திமுக ஆட்சி அமைத்து 50 மாதங்கள் உருண்டோடிவிட்டது. இந்த 50 மாதங்களில் குன்னம் தொகுதிக்கு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்ட வந்திருக்கிறார்களா? 50 மாதங்களில் மக்களை தந்திரமாக ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அவர் கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். சொந்த பணத்தில் கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கடுமையான அழுத்தம் கொடுத்ததால் 28 மாதங்கள் கழித்து மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்ததாக தவறான கருத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் 30 லட்சம் பேருக்கு வழங்கப்படும் எனக் கூறுகிறார். மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. அவருக்கு 30 லட்சம் குடும்பத்தினருடைய வாக்கு வேண்டும். அதனால் கொடுப்பதாக சொல்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு 10 சதவீதம் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியுள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார். சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினார். உயர்த்தினாரா? 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக தேய்ந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
கண்ணில் பார்க்க முடியாத காற்றை வைத்து ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். நாட்டுக்கு நன்மை செய்வோம் என்று இவர்கள் பேசுகிறார்கள். இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்த காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வாடிக் கொண்டிக்கிறார்கள்.
1.05 கோ பேரிடம் மனு வாங்கப்பட்டு 1.01 லட்சம் மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக சொல்கிறார்கள். என்னென்ன மனுக்கள் கொடுக்கப்பட்டன? எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது? என விளக்கம் கொடுங்கள். விளக்கம் கொடுக்கப்பட வில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு இப்படி தவறாக புள்ளி விவரங்கள் கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாகத்தான் அரசு செய்திகள் வெளியிடப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. செல்வாக்கை இழந்ததால் எப்படியாவது மக்களை குழப்பி, ஆட்சி வர வேண்டும். திட்டமிட்டு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரிகளாக இருந்து கொண்டு தவறான புள்ளி விவரங்களை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள். அதற்கு முழு பொறுப்பு நீங்கள்தான் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.