என் மலர்

    பாகிஸ்தான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
    • இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

    எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
    • தனது வான்வெளிப் பகுதியை இந்திய விமான நிறுவனங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

    பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சஸ்பெண்ட் செய்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங பிரதமர் மோடியை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் பாகிஸ்தானை தாக்கலாம் என்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரும், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தனது சகோதரரும், பிரதமருமான ஷெபாஷ் ஷெரீஃபிடம் இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோசமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்தியா உடனான பதற்றத்தை கட்டுப்படத்த அனைத்து டிப்ளோமேட்டிக் வளங்களை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து நேற்று மாலை நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அப்போது நவாஸ் ஷெரீப் இந்த ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
    • அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.

    அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

    இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
    • இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும்

    காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது.

    மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.

    நாடு முழுவதும் நமது அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறிவைக்கின்றன" என்று தெரிவித்தார்.

    மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், இந்த தடை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்றும் அப்பாசி கூறினார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது பாதுகாப்புத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக பாகிஸ்தானைக் குறை கூறுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதாவது:-

    சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின்(இந்தியா) ரத்தம் ஓடும். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன் மூலம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், இந்தியா காண்பிக்கட்டும்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. அதேவேளையில் நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராகவும் உள்ளன.

    பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகம் இந்த நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது" என்று தெரிவித்தார் .

    முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்று தெரிவித்திருந்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமர் பேச்சு.

    ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் பேசியுள்ளார்.

    அப்போது அவர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறத்து அவர் மேலும் கூறுகையில்," நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    • பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு ஏற்கனவே இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலையில் உள்ளனர். எல்லையில் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு தமது முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
    • எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.

    இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.

    பரஸ்பரம் எல்லை மூடப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.

    மேலும், இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

    3வது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உள்பட நிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
    • தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இன் பயன்படுத்த முடியாது

    தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.

    இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்தக் கூடாஐ என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. 

    ×