என் மலர்

    நீங்கள் தேடியது "Rajinikanth"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
    • கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது.
    • தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.

    மேலும் நடிகர் ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, ரஜினியும் நானும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். ரஜினியும் நானும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
    • சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'கூலி'. இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.

    'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு வாழ்த்து. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • மனிதன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.

    1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின.

    இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். 

    மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
    • அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன

    அமைந்தகரை அருண் ஓட்டலில் 3-வது மாடியில் நண்பர்களுடன் தங்கி இருந்த சிவாஜி ராவ் கல்லூரிக்கு புறப்படும் ஸ்டைலே தனியாக இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து சிகரெட்டை புகைத்தப்படியே வராண்டாவில் வலம் வருவார். மற்ற நண்பர்கள் கண் விழிப்பதற்குள் இரண்டு, மூன்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளி விடுவார்.

    நண்பர்கள் எழுந்து கல்லூரிக்கு தயாராக வேண்டும் என்று குளியல் அறைக்கு செல்ல நினைத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. ஏனெனில் அதற்குள் குளியல் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே சிவாஜி ராவ் தம் அடித்துக் கொண்டு இருப்பார். அது மட்டு மல்ல குளியல் அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு விதவிதமாக நடித்தும் பார்ப்பார்.

    இது அவரது அறை நண்பர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு நாங்கள் எல்லோரும் குளித்த பிறகுதான் நீ குளிக்க வேண்டும் என்று சிவாஜிராவுக்கு நண்பர்கள் உத்தரவிட்டனர். என்றாலும் சிவாஜிராவ் யாருக்காகவும் தனது சுதந்திரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.

    இதனால் அறையில் அவருக்கும், ரவீந்திர நாத்துக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரும் ஜென்ம விரோதிகள் போல சண்டைப் போடுவார்கள். அப்போது சதீசும், அசோக்கும் இடையில் புகுந்து சண்டையை தீர்த்து வைப்பார்கள்.

    ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது மாதிரி சிவாஜி ராவும், ரவீந்திரநாத்தும் கொஞ்சி குலாவியபடி பேசிக் கொள்வார்கள். சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.

    அமைந்தகரையில் இருந்து திரைப்படக் கல்லூரி அமைந்து இருந்த ஜெமினி பாலம் வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவாஜிராவும் அவரது நண்பர்கள் வேணுகோபால், சதீஷ், அசோக் மற்றும் சிலர் தினமும் ஒரே பஸ்சில்தான் பயணம் செய்வார்கள்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. மேத்தா நகர் வழியாக ஒரு வழித்தடம் உள்ளது. அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித் தடம் உள்ளது. இதில் 1973-ல் அமைந்தகரையில் இருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி பாலம் செல்ல 25 காசுகள் கட்டணம் கொடுக்க வேண்டும்.

    அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக செல்லும் பஸ்களுக்கு 30 காசுகள் கட்டணம். சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் தினமும் அந்த 5 பைசாவை மிச்சப்படுத்துவதற்காக மேத்தா நகர் வழியாக செல்லும் பஸ்சில்தான் ஏறுவார்கள்.

    அந்த பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வரும்போது பெரும்பாலான நாட்கள் ரெயில்வே கேட்டில் நிற்க வேண்டியது ஆகி விடும். 1973-ல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே அந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட் திறக்கும்வரை அங்கேயே நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கும்.

    அப்படி சிவாஜி ராவ் வரும் பஸ்களும் ரெயில்வே கேட்டில் சிக்கி விடுவது உண்டு. ஒரு தடவை நுங்கம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டால் மீண்டும் திறப்பதற்கு சுமார் 30 நிமிடங்களாவது ஆகிவிடும். இதனால் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பல நாட்கள் திரைப்படக் கல்லூரி வகுப்புக்கு தாமதமாக சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

    ரெயில்வே கேட் மூடப்படும் நாட்களில் சிவாஜிராவும் நண்பர்களும் பஸ்சில் அடிக்கும் லூட்டிகள் பயங்கரமாக இருக்கும். அந்த சமயங்களில் சிவாஜி ராவை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்பதற்காகவே சில சமயங்களில் "ஏய் கருப்பா?" என்று நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது எல்லாம் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் வந்து விடும்.

    ஒரு தடவை சிவாஜி ராவை பார்த்து பஸ்சில் வைத்து சதீஷ் "டேய் நீ ஏன்டா இவ்வளவு கருப்பாய் இருக்கிறாய்? உனக்கு எப்படி கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும்?" என்று கிண்டல் செய்தார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "டேய் கேலி செய்யாதே? எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன்? என் கையில் கிடைப்பதை தூக்கி அடித்து விடுவேன்" என்று எச்சரித்தார்.

    என்றாலும் சதீஷ் தொடர்ந்து சிவாஜி ராவை பார்த்து கருப்பா.... கருப்பா... என்றே சொல்லி வெறுப்பு ஏற்றினார். பஸ்சில் பல பயணிகள் முன்னிலையில் சதீஷ் செய்த கிண்டல் சிவாஜி ராவுக்குள் குமுறலை ஏற்படுத்தியது. "டேய் விளையாடாதே? என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்று முறைத்தார்.

    அப்போது ஜெமினி பாலம் பஸ் ஸ்டாப் வந்து இருந்தது. நண்பர்கள் அனைவரும் இறங்கினர்கள். அப்போதும் சதீஷ் சிவாஜி ராவை பார்த்து, "கருப்பா வேகமா வாடா?" என்றார். அடுத்த நிமிடம் சிவாஜி ராவ் பாய்ந்து சென்று சதீசை சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.

    "நீ என்ன பெரிய மன்மதனா? எப்போது பார்த்தாலும் என்னை கருப்பா என்கிறாய்? உன் மனதில் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று எச்சரித்தார். சிவாஜி ராவுக்கு வந்த கோபத்தை பார்த்து சதீஷ் ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி ராவிடம் நிறம் பற்றி கிண்டல் செய்து பேசியதே இல்லை.

    சிவாஜி ராவ் கோபப்பட்டாலும் சிறிது நேரத்தில் அதை மறந்து நண்பர்களுடன் கலகலப்பாக பேச ஆரம்பித்து விடுவார். இதனால் கல்லூரியிலும், அருண் ஓட்டலிலும் எப்போதும் நண்பர்கள் அவருடன் இருந்தனர். அந்த நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதுதான் அவரது இரவு நேர பழக்கமாக இருந்தது.

    சிவாஜி ராவிடம் இருந்த சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் தவிர மற்ற அனைத்து பழக்கங்களையும் அவரது நண்பர்கள் ரசித்தனர். குறிப்பாக சினிமா மீது சிவாஜி ராவுக்கு இருந்த வெறியை நினைத்து பிரமிப்பார்கள். எப்போதும் சினிமா நினைப்பிலேயே இருந்த சிவாஜி ராவ் அடிக்கடி அமைந்தகரை லட்சுமி டாக்கீசுக்கு படம் பார்க்க சென்று விடுவார்.

    தமிழில் புதுப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால் சிவாஜிராவ் தவற விட மாட்டார். அன்று முதல் ஆளாக லட்சுமி டாக்கீசில் ஆஜராகி விடுவார். நண்பர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி லட்சுமி டாக்கீசுக்கு சென்று படம் பார்ப்பது அவருக்கு ஒரு பழக்கமாக மாறிப் போனது.

    அமைந்தகரை லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் புதுப்படங்கள் ரீலிஸ் ஆகாத நாட்களில் இடையிடையே பழைய படங்களையும் போடுவார்கள். அந்த படங்களையும் சிவாஜிராவ் விட்டு வைப்பது இல்லை. முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பார்.

    தங்கை, தங்கசுரங்கம், என் தம்பி, திருடன், ராஜா, எங்கள் தங்க ராஜா உள்பட சிவாஜி கணேசன் படங்களில் பெரும்பாலானவற்றை சிவாஜிராவ் லட்சுமி தியேட்டரில்தான் கண்டுகளித்தார். அதுபோல எம்.ஜி.ஆர். நடித்த படங்களையும் அவர் விடாமல் பார்த்தார். எம்.ஜி.ஆர்.- சிவாஜி என்ற இரண்டு இமயங்களும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்ததை அவர் படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆர்வமாக விவாதிப்பார்.

    குறிப்பாக சிவாஜிகணேசனின் நடிப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருந்த சிவாஜி ராவுக்கு அடிக்கடி படம் பார்ப்பதால் கூடுதல் செலவு ஆனது. என்றாலும் சிவாஜிராவ் சாப்பாட்டை தியாகம் செய்து விட்டு கூட லட்சுமி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது உண்டு.

    சில சமயங்களில் சிவாஜி ராவிடம் போதுமான அளவுக்கு கையில் காசு இருக்காது. அதே சமயத்தில் லட்சுமி தியேட்டரில் புதிய படம் வெளியாகி இருக்கும். என்றாலும் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிவாஜிராவ் லட்சுமி தியேட்டருக்கு சென்று சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது உண்டு.

    ஒரு தடவை லட்சுமி தியேட்டரில் அவர் தரையில் உட்கார்ந்து சிவாஜி படத்தை பார்த்து விட்டு வந்தார். அந்த அளவுக்கு சிவாஜி நடிப்பில் அவர் மனதை பறிக் கொடுத்து இருந்தார்.

    லட்சுமி தியேட்டரில் மட்டுமின்றி திரைப்படக் கல்லூரியிலும் சிவாஜி ராவுக்கும், அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி படங்கள் போட்டு காட்டப்படுவது உண்டு. பெரும்பாலும் திரைப்படக் கல்லூரியில் காட்டப்படும் படங்கள் ஆங்கிலப் படங்களாக இருக்கும். ஆலிவுட் நடிகர்கள் சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், கிரிகிரிபெக், ஆண்டனிகுயின், மார்லன்பிராண்டோ ஆகியோரது படங்களை அடிக்கடி காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்.

    அந்த நடிகர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் அனைத்தையும் சிவாஜி ராவ் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதுபோலவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், சத்யன், நாகேஸ்வரராவ் ஆகியோரது படங்களையும் பார்த்து அவர்களிடம் இருந்த தனித்துவத்தை புரிந்து உணர்ந்துக் கொண்டார்.

    சினிமா படங்களை பார்க்க... பார்க்க... அவருக்குள் நடிப்பின் மீதான வெறி விஸ்வரூபமாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற தியேட்டர்களுக்கும் சென்று படங்கள் பார்த்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளின் படங்களும், நடிகர்களின் நடிப்பும் அவரது மனதுக்குள் ஆழமாக பதிந்தன.

    இந்த நிலையில்தான் அமைந்தகரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிவாஜி ராவை போலீசார் சுற்றி வளைத்து அடி பின்னி எடுத்து விட்டனர்.

    அந்த பயங்கர சம்பவம் பற்றி திங்கட்கிழமை (22-ந்தேதி) பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தை யார் இயக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு சிலர் இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன்.
    • 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.

    விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். இந்த படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார்.

    தொடர்ந்து ரஜினிகாந்திடம் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

    முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
    • கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. இதையடுத்து இவர்களின் கூட்டணியில் அடுத்த படம் எப்போது? என்ற கேள்வி எழுந்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மிகவும் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார். 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை மோகினி 90 ஸ் களில் வலம் வந்த பெரிய நடிகையாவார்.

    நடிகை மோகினி 90 ஸ் களில் வலம் வந்த பெரிய நடிகையாவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

    ஆதித்யா369, நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம், பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     

    அவர் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் "ரஜினி சார் படம் மட்டும்தான் பிடிக்கும். அதை மட்டும்தான் பார்ப்பேன் அவரோட ஸ்டைல் பிடிக்கும்,

    கமல் படம் பிடிக்காது. இவர் ஏன் எப்ப பார்த்தாலும் Heroineஐ Kiss பண்ணிட்டே இருக்கார்னு பாக்கமாட்டேன்" என கூறினார்.

    இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.
    • அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.

    பெங்களூரில் இருந்து சிவாஜி ராவ் புறப்பட்டபோது அவருக்கு ராஜ்பகதூர் பல அறிவுரைகளை சொல்லி இருந்தார். குறிப்பாக புகை பிடிப்பதை கண்டிப்பாக குறைக்க வேண்டும். இதனால் பணம் மிச்சப்படும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் சிவாஜி ராவால் இந்த அறிவுரையை கடைபிடிக்க இயலவில்லை.

    அதே சமயத்தில் ராஜ்பகதூர் கூறியிருந்த மற்றொரு அறிவுரை சிவாஜி ராவ் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. திரைப்படக் கல்லூரி வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு வந்து அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிந்து பணம் சம்பாதிக்கலாம் என்று ராஜ்பகதூர் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது.

    எனவே சிவாஜி ராவ் வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு சென்று கூடுதல் நேரம் பணிபுரிந்து சென்னைக்கு திரும்பி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தார். என்றாலும் புதிய உடை வாங்க முடியாத நிலையில்தான் சிவாஜி ராவ் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

    இதற்கிடையே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சகஜமாக பழகத் தொடங்கி இருந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை பின்னணி மற்றவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் நண்பர்களுக்குள் நட்புணர்வு அதிகரித்தது. இப்படியே ஒரு மாதம் கடந்து இருந்தது.

    இந்த நிலையில்தான் சிவாஜி ராவ் பற்றிய தகவல்களை மற்ற நண்பர்கள் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது சிவாஜி ராவ் சாதாரண விடுதி ஒன்றில் தங்கி இருந்து கஷ்டப்படுவது அவரது வகுப்பு தோழர்களான வேணுகோபால், ரவீந்திரநாத், ரகுநந்தன் ஆகியோருக்கு தெரிய வந்தது.

    ஒருநாள் வேணுகோபாலும், ரவீந்திரநாத்தும் திடீரென சிவாஜி ராவ் தங்கியிருந்த விடுதிக்குள் சென்றனர். அங்கு சிவாஜி ராவ் ஒரு பாயை விரித்து தரையில் தூங்கும் நிலையை கண்டனர். அவர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது.

     

    சிவாஜி ராவை எழுப்பி, "டேய் இந்த அறையில் எப்படிடா தங்கி இருக்கிறாய்? ஏற்கனவே வெளியில் வெயில் தாக்கம் தாங்க முடிய வில்லை. உள்ளே அடுப்பு வெப்பம் வேறு வருகிறது. இந்த கடுமையான வெப்பத்தில் எப்படி தங்கி இருக்கிறாய்? சூடு பிடித்தே உடல்நலம் கெட்டு போய் விடுமே?" என்றனர்.

    சிவாஜி ராவ் தலையை குனிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் மல்கி இருந்தது. முதல் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தார். பிறகு அவர், "நான் வசதியான வீட்டு பையன் இல்லை. சாதாரண கண்டக்டர் வேலை பார்த்து வந்தேன். குடும்பத்தில் யாருக்கும் அவ்வளவு வசதி கிடையாது. நண்பர்கள்தான் உதவி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி சற்று வசதியான வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியும்?

    எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. சென்னையில் எனக்கு வேறு யாரையும் தெரியாது. சென்னையில் உறவினர்களும் கிடையாது. நான் எங்கு போக முடியும்? எனக்கு இந்த இடம் கிடைத்ததே பெரிய விஷயம். எனவேதான் இங்கு தங்கி விட்டேன்.

    இங்கேயே எனக்கு காலை சாப்பாடு தருகிறார்கள். இரவிலும் உணவு கிடைக்கிறது. என் கையில் இருக்கும் பணத்துக்கு இதுதான் கட்டுப்படி ஆகிறது. எனவேதான் இந்த விறகு அடுப்பு வெப்பத்தை கண்டு கொள்ளாமல் இங்கு தங்கியிருந்து சமாளித்து வருகிறேன்" என்றார்.

    சிவாஜி ராவ் சொல்ல... சொல்ல... வேணு கோபாலுக்கு மிகவும் வேதனையாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் முதல் முதலாக அவருக்கு சிவாஜி ராவ் மீது இரக்கம் பிறந்தது. ஒரு வாழ்க்கை லட்சியத்துக்காக எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார் என்று பிரமித்துப் போனார்.

    இப்படிப்பட்ட நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரது உள்மனது விடாப்பிடியாக சொன்னது. அடுத்த நிமிடமே அவர், "சிவாஜி ராவ் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். நாங்கள் எல்லோரும் அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டலில் தங்கி இருக்கிறோம். நீயும் எங்களுடன் வந்து அங்கு தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

    ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை. வேண்டாம் வேணுகோபால் எனக்கு அது சரிப்பட்டு வராது என்றார். ஆனால் வேணுகோபால் விடவில்லை. இப்போதே புறப்படு என்று வலியுறுத்தினார். அப்போது ரவீந்திரநாத் முகம் மட்டும் மாறியது. அவருக்கு சிவாஜி ராவை அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை.

    ஏற்கனவே அவர் இருந்த அறையில் 3 பேர் இருந்தனர். எனவே சிவாஜி ராவ் வந்தால் உள்ளே தங்குவதற்கும், தூங்குவதற்கும் சிரமமாக இருக்குமோ என்று நினைத்தார். அவர் வேணுகோபாலை சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்றார். சிவாஜி ராவை ஓட்டலுக்கு கூப்பிடாதே. அவனை அங்கு வைத்து நம்மால் சமாளிக்க இயலாது. அவன் இங்கேயே இருக்கட்டும் என்று ரவீந்திரநாத் கூறினார்.

    ஆனால் வேணுகோபால் அதை ஏற்கவில்லை. சிவாஜி ராவை எப்படியாவது அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே சிவாஜி ராவிடம் புறப்படு... புறப்படு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.

    மறுநாளே அந்த விடுதி அறையை காலி செய்து விட்டு சிவாஜி ராவ் அந்த ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அந்த ஓட்டல் நான்கு மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஓட்டல் ஆகும்.

    சென்னையில் 1970-களில் இருந்த புகழ் பெற்ற ஓட்டல்களில் ஒன்றாக அமைந்தகரை அருண் ஓட்டல் இருந்தது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் அங்குதான் தங்குவார்கள். அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.

    எனவே அருண் ஓட்டலை பார்த்ததும் சிவாஜி ராவுக்கு பிரமிப்பாக இருந்தது. வேணுகோபால் மற்றும் 16 திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அங்குதான் தங்கி இருந்தனர். 18-வது நபராக அந்த ஓட்டலுக்குள் சிவாஜி ராவ் காலடி எடுத்து வைத்தார். அந்த ஓட்டலில் 3-வது மாடியில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.

    சிவாஜி ராவை வேணுகோபால் தனது அறையில் தங்கிக் கொள்ளும்படி கூறினார். அந்த அறையில் ஏற்கனவே 3 பேர் இருந்தனர். சிவாஜி ராவ் 4-வது நபராக அந்த அறைக்கு சென்றார். இதன் மூலம் சிவாஜி ராவுக்கு பிரச்சினை இல்லாமல் தூங்குவதற்கு ஒரு இடம் கிடைத்து விட்டது.

    அருண் ஓட்டலில் அறை எண் 324 என்பதுதான் சிவாஜிராவ் வசித்த அறையாகும். 10க்கு15 என்ற அளவில் அந்த சிறிய அறை இருந்தது. ஏற்கனவே இருந்த 3 பேரில் 2 பேர் மட்டும்தான் கட்டிலில் படுத்து தூங்கும் வசதி பெற்று இருந்தனர். இதனால் சிவாஜி ராவ் அந்த அறையில் கீழே தரையில்தான் படுத்து தூங்க வேண்டியதாயிற்று.

    அந்த அறையை வேணுகோபாலும், ரவீந்திர நாத்தும் மிக மிக சுத்தமாக வைத்து இருந்தனர். ஒரு கட்டில், மூலையில் ஒரு மேஜை. துணி அடுக்கி வைப்பதற்கு அலமாரி என்று அந்த அறை கச்சிதமாக காணப்பட்டது. விறகு அடுப்பு வெப்பத்தில் தூங்கி பழக்கப்பட்டு இருந்த சிவாஜி ராவுக்கு அந்த அறை சொர்கமாக தெரிந்தது.

    அந்த அறைக்கு அருண் ஓட்டல் நிர்வாகம் மாத வாடகைக்காக ரூ.175 நிர்ணயம் செய்து இருந்தது. வேணுகோபாலும், அவருடன் இருந்த மற்ற 2 பேரும் சரிசமமாக பணம் கொடுத்து அந்த வாடகையை செலுத்தி வந்தனர். அதாவது ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஓட்டலில் தங்குவதற்கு 60 ரூபாய் செலவு செய்தனர்.

    சிவாஜி ராவின் ஏழ்மை நிலை வேணுகோபாலுக்கு தெரிந்ததால் அவர் அதிக வாடகையை சிவாஜிராவிடம் கேட்கவில்லை. வாடகை பணத்துக்காக அவர் வலியுறுத்தவில்லை. என்றாலும் நண்பர்கள் நிர்பந்தம் செய்ததால் சிவாஜி ராவிடம் இனி மாத வாடகைக்காக 40 ரூபாய் தந்தால் போதும் என்று கூறி விட்டார்.

    இதைக் கேட்டதும் சிவாஜி ராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் இந்த 2 ஆண்டுகளிலும் நிம்மதியாக இங்கு தங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அமைந்தகரையில் இருந்து மாநகர டவுன் பஸ்சில் ஜெமினி பாலம் வரை சென்று வரலாம் என்று சிவாஜி ராவ் திட்டமிட்டுக் கொண்டார்.

    கல்லூரிக்கு கட்டணம் கட்டியாகி விட்டது. தங்குவதற்கு நல்ல இடமும் கிடைத்து விட்டது. ஆனால் சாப்பாடு சிவாஜி ராவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துக் கொண்டே இருந்தது. திரைப்படக் கல்லூரி கேண்டினில் தினமும் சாப்பிடுவது மிகப்பெரிய போராட்டமாக அவருக்கு இருந்தது.

    நல்ல சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்குமே? என்று சிவாஜி ராவ் மனதுக்குள் ஏங்கினார். அதற்கும் அவர் நம்பி வணங்கிய ராகவேந்திரர் சுவாமிகள் வழி காட்டினார். அவரது திரைப்படக் கல்லூரி நண்பர் ரகுநந்தன் மூலம் அதற்கான வழி பிறந்தது.

    ஒரு நாள் ரகுநந்தனிடம் சிவாஜிராவ் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார். நீ எங்கு தங்கி இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு ரகுநந்தன், "திரைப்படக் கல்லூரி அருகே இருக்கும் உட்லண்ட்ஸ் ஓட்டலில் எனது உறவினர் சங்கர்ராவ் மானேஜராக இருக்கிறார்.

    எனவே நான் அந்த ஓட்டலிலேயே தங்கி இருக்கிறேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரகுநந்தன் தொடர்ந்து பேசுகையில் திரைப்படக் கல்லூரி படிப்பு நேரம் போக அந்த ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிவதாகவும் கூறினார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து திரைப்படக் கல்லூரி கட்டணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

    அது மட்டுமின்றி உட்லண்ட்ஸ் ஓட்டலிலேயே தனக்குரிய சாப்பாட்டையும் பார்த்துக் கொள்வதாக ரகுநந்தன் கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகவும் உற்சாகமாகி விட்டது. நானும் அங்கு சாப்பிட வரட்டுமா? என்று சிவாஜிராவ் குழந்தைப் போல அப்பாவித்தனமாக கேட்டார்.

    அதற்கு ரகுநந்தன் என்ன சொன்னார்? என்பதை நாளை பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக தகவல்.
    • அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக வெளியாகும் நேர்காணல் முற்றிலும் தவறானது என அமீர் கான் தரப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமீர் கான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமீர் கான் கூலி திரைப்படம் குறித்து எந்த நேர்காணலும் வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது.

    சமூக ஊடகங்களில் ஒரு போலி நேர்காணல் வலம் வருகிறது. அதில் அமீர் கான் கூலி திரைப்படத்தை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு போலி நேர்காணல். 

    அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். மேலும், அவர் தனது படைப்புகளைப் பற்றி எளிதாகப் பேசுவதில்லை.

    உண்மை என்னவென்றால், அமீர் கான் இன்னும் கூலி படத்தைப் பார்க்கவில்லை. அமீர் கான் படத்தைப் பார்க்கும் போது தான் உடன் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால், அது இன்னும் நடக்கவில்லை.

    கூலியின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.

    அந்த நேர்காணலும் அத்தகைய செய்திகளும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளவும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×