என் மலர்

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
    • கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது.
    • சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிவாஜிராவ் மீது பேராசிரியர் கோபாலி காட்டிய பாசமும், அக்கறையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. 1974-ம் ஆண்டின் முற்பகுதியில் சிவாஜிராவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது லட்சியம் எல்லாம் விரைவில் நடிகனாகி விடவேண்டும் என்ற இலக்கை நோக்கியே இருந்தது.

    அதற்கு பேராசிரியர் கோபாலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருந்தார். ஒரு கட்டத்தில் பேராசிரியர் கோபாலி தனது வீட்டில் இருந்து எடுத்து வரும் சாப்பாட்டை சிவாஜிராவை அழைத்து பகிர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். சிவாஜிராவும் வெட்கப்படாமல் வாங்கி வயிறுநிறைய சாப்பிடுவார்.

    சில சமயங்களில் பேராசிரியர் கோபாலிக்கு எதுவும் இருக்காது. அவர் சாப்பாட்டில் பெரும்பகுதியை சிவாஜிராவ் சாப்பிட்டு முடித்து இருப்பார். பிறகு மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு சென்று தோசை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படி பல நாட்கள் நடந்துள்ளது.

    நாளடைவில் பேராசிரியர் கோபாலியின் வீட்டுக்கு சிவாஜிராவ் செல்ல தொடங்கினார். பேராசிரியரின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாடி விட்டு வருவார். சில நாட்கள் பேராசிரியர் வீட்டிலேயே சாப்பிடவும் செய்வார்.

    பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. எனவே அந்த ஊறுகாயை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் பேராசிரியர் கோபாலி வீட்டுக்கு செல்வது உண்டு. அப்போது எல்லாம் உணவுடன் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பேராசிரியர் கோபாலி சொல்லிக் கொண்டே இருப்பார்.

    அவரது தொடர்ச்சியான அறிவுரைகள் காரணமாக சிவாஜிராவிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கூச்சத்தை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தைரியமாக பேசவும், செயல்படவும் தொடங்கினார். இதனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களில் சிவாஜிராவ் தனித்துவமாக தெரியத் தொடங்கினார்.

    அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்காக நிறைய திரைப்படங்களை காட்டுவார்கள். அவற்றை எல்லாம் பார்க்கும் சிவாஜிராவ் மேற்கொண்டு தனியாகவும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார். முதலில் அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த அவர் பிறகு சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களுக்கும் செல்ல தொடங்கினார்.

    குறிப்பாக தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அடிக்கடி சென்று படம் பார்த்தார். தமிழ் புரிகிறதோ? இல்லையோ? தமிழில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் முதல் நாளே பார்த்து விடும் பழக்கத்தை உருவாக்கி இருந்தார். அப்படித்தான் அவர் நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து இருந்தார்.

    திரைப்படக் கல்லூரியில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல நடிகர்கள், நடிகைகள் நடிப்பதை நேரில் காட்டுவதும் ஒன்றாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். 2-ம் ஆண்டு படித்தபோது நடிப்பது மட்டுமின்றி பின்னணி பேசுவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, சண்டைக் காட்சிகளில் நடிப்பது, பாடல் காட்சிகளில் நடிப்பது, வசனம் பேசுவது என்று நிறைய பயிற்சிகள் கொடுத்தனர்.

    ஒவ்வொரு பயிற்சியையும் சிவாஜிராவ் ஆர்வமுடன் செய்தார். டான்ஸ் ஆடுவது மட்டும்தான் அவருக்கு சற்று அலர்ஜியாக இருந்தது. எனவே டான்ஸ் கிளாசுக்கு மட்டும் வராமல் தப்பிச் சென்று விடுவார்.

    என்றாலும் நடிப்பு பயிற்சியில் மட்டும் அவர் குறைவைத்ததே இல்லை. கன்னட வகுப்பில் படித்தாலும் அவருக்கு சென்னையில் இருந்ததாலோ என்னவோ தமிழ் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே தமிழ் மொழி வகுப்பில் சொல்லிக் கொடுப்பதையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்துக் கொள்வார்.

    ஒரு கட்டத்தில் தமிழ் மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் சிவாஜிராவின் செயல்பாடுகள் அமைந்தன. தமிழ் வகுப்பில் புதிதாக ஏதாவது செய்து விட்டால் அதை கன்னட வகுப்பிலும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். கன்னட வகுப்பில் அந்த மாதிரி பயிற்சி கிடைக்காவிட்டால் தமிழ் வகுப்பில் என்ன சொல்லி கொடுத்தார்கள்? என்று தெரிந்துக் கொள்வார்.

    தமிழ் வகுப்பில் படித்து வந்த நடராஜ், சதீஷ் இருவரிடமும் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரிடமும் தமிழ் பாடப்பிரிவில் என்னென்ன நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். எப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். தமிழ் மொழி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் தாங்களாகவே நாடகங்கள் எழுதி நடித்து வந்தனர்.

    ஆனால் கன்னட மொழி மாணவர்கள் அத்தகைய பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜிராவ் தமிழ்ப் பிரிவு மாணவர்கள் என்ன நாடகம் நடத்துகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்வார். அந்த நாடகத்தில் என்னென்ன கேரக்டர்கள் வருகிறது என்பதையெல்லாம் கேட்பார்.

    அதில் ஏதாவது ஒரு கேரக்டர் அவருக்கு பிடித்து விட்டால் அந்த கேரக்டரை எழுதி தரச்சொல்லி வாங்கி படித்துப் பார்த்து அதை நடித்து ஒத்திகைப் பார்ப்பார். இப்படி சிவாஜிராவ் ஒவ்வொரு நாளும் தனது நடிப்பு திறமையை பட்டைத் தீட்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மற்றொரு பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்களை நீண்ட உரையாடல் போல பேச வைப்பார்கள்.

    அவர்களது அனுபவம் புதிதாக நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கை கொடுக்கும் என்று நினைத்தனர். அந்த வகையில் நிறைய நடிகர்-நடிகைகள் திரைப்படக் கல்லூரிக்கு வந்து வகுப்பு நடத்தினார்கள்.

    அவர்கள் பேச்சை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து தனது மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். டைரக்டர்களிடம் மிகுந்த பணிவு காட்டி பழகினார். அந்தக் கால கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் எழுதப்படாத ஒரு விதி இருந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் 2 ஆண்டுகளிலும் டைரக்டர்களிடம் சென்று படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கக் கூடாது என்பதுதான் அந்த விதியாகும்.

    ஆனால் சிவாஜிராவ் அதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. சினிமா தயாரிக்கப்படும் இடங்களுக்கு எல்லாம் சென்று சினிமா தொடர்புடையவர்களை பார்த்து பேச தொடங்கினார். ஆனால் ஒருவர் கூட அவரை கண்டு கொண்டதே கிடையாது. என்றாலும் மனம் தளராமல் சிவாஜிராவ் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

    ஒரு சமயம் ஸ்ரீதர் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரது அறிவுரைகள் சிவாஜிராவை வியக்க வைத்தது. அதுபோல நடிகை பானுமதி ஒரு தடவை வந்து நீண்ட நேரம் வகுப்பு நடத்தினார். நடிப்பிலும், டைரக்ஷனிலும் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதுபோல நடிகை சவுகார்ஜானகி திரைப்படக் கல்லூரிக்கு வந்து விதவிதமாக எப்படி நடிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்.

    இவையெல்லாம் சிவாஜிராவுக்குள் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்க செய்தது. ஒரு நடிகனாகவே மாறி விட்டது போன்று சிவாஜிராவ் உணரத் தொடங்கினார். அருண் ஓட்டல் அறைகளிலும், திரைப்படக் கல்லூரி அறைகளிலும் அவர் எப்போதும் வித்தியாசமாக ஸ்டைலை உருவாக்கி நடித்து காட்டிக் கொண்டே இருந்தார்.

    அதிலும் எங்காவது கண்ணாடியை பார்த்து விட்டால் ஒருதடவை அதன் முன்பு நின்று ஸ்டைல் காட்டாமல் போக மாட்டார். சாலையோர ஜவுளி கடை கண்ணாடி முன்பு நின்று கூட அவர் ஒரு தடவை ஸ்டைலாக நடித்து பார்த்தார் என்றால் அவரது மனதுக்குள் எந்த அளவுக்கு நடிப்பு மீது வெறி இருந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் 2-ம் ஆண்டு வகுப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் 3 மாதங்களில் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் என்று தெரிய வந்ததும் சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    திரைப்படக் கல்லூரி படிப்பு முடிந்ததும் தனக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர் மனதுக்குள் கேள்விக்குறிகள் கடல் அலைபோல வந்து கொண்டே இருந்தன. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் பெங்களூருக்கு திரும்பி போய் விட வேண்டியது இருக்குமோ என்று நினைத்த போது அவரது மனது கடும் பீதிக்குள்ளானது.

    கல்லூரி படிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க... நெருங்க... சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் மற்றும் பேராசிரியர்கள் சிவாஜிராவிடம் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தனர்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் கடைசி மாதத்தில் சிவாஜிராவின் வாழ்க்கைைய மாற்றப்போகும் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அன்று சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி கூறுகையில், "டேய் நாளைக்கு டைரக்டர் பாலச்சந்தர் வரப்போகிறார். நிறைய விஷயங்கள் சொல்வார். கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்" என்றார். டைரக்டர் பாலச்சந்தர் வருகிறார் என்றதும் சிவாஜிராவ் முகம் ஆயிரம் சூரியன்கள் கொண்ட பிரகாசம்போல மாறியது. பாலச்சந்தர் கவனத்தை தன் பக்கம் எப்படி திரும்ப செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

    சிவாஜிராவ் என்ன பேசினார்? எப்படி டைரக்டர் பாலச்சந்தர் மனதில் இடம் பிடித்தார் என்பதை திங்கட்கிழமை (29-ந்தேதி) பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது.
    • தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.

    மேலும் நடிகர் ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, ரஜினியும் நானும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். ரஜினியும் நானும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
    • சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.

    தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.

    பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.

    அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

    இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.

    1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.

    அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

    ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.

    திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.

    எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.

    குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.

    ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.

    இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.

    சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.

    அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

    அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.

    பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.

    இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.

    சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

    அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    "கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.

    அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.
    • திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர்.

    ஒரு பாட்டில் வெனிகர் குடித்தால் ஒரு பாட்டில் பிராந்தி கிடைக்கும் என்று சொன்னதும் சிவாஜிராவால் ஆசையை அடக்க முடியவில்லை. தன் முன் சதீஷ் கொண்டு வந்து வைத்த வெனிகர் பாட்டிலை எடுத்தார். ஒரே மூச்சில் மடக்... மடக்... என்று குடித்து முடித்து விட்டார்.

    இதைக் கண்ட அவரது நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. சிவாஜி ராவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்பட்டனர். ஆனால் சிவாஜிராவ் ஸ்டைலாக தனது கையை வானத்தை நோக்கி உயர்த்தி காட்டினார். "கடவுள் என் பக்கம் இருக்கும் வரை எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றார். அவர் குரலில் ஒருவித உறுதி தெரிந்தது.

    அதே ஸ்டைலில் இருக்கையில் இருந்து வேக, வேகமாக எழுந்த சிவாஜி ராவ் குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுத்தார். தான் குடித்த ஒரு பாட்டில் வெனிகரையும் வாந்தி எடுத்து வெளியில் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்களில் மிக சகஜமாக மாறி நண்பர்கள் அருகில் வந்தார். சதீசை பார்த்தபடி, "டேய் போய் ஒரு பெரிய பாட்டில் பிராந்தி வாங்கிட்டு வாடா...?" என்றார்.

    வேறு வழி தெரியாத சதீஷ் ஒரு பாட்டில் பிராந்தி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முழுப் பாட்டில் பிராந்தியையும் சிவாஜி ராவ் ஒரே ஆளாக குடித்து முடித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவாஜி ராவிடம் நண்பர்கள் சவால் விடவோ, பந்தயம் கட்டவோ பயப்பட்டனர்.

    அந்த சமயத்தில் பருவ மழை காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது. அசோக் அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டார்.

    ஒரு வாரம் திரைப்படக் கல்லூரிக்கு வராமல் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தனியாக இருந்ததால் அவருக்கு மிகவும் போர் அடித்தது. எனவே காய்ச்சல் சற்று குறைந்ததும் அவர் கல்லூரிக்கு புறப்பட்டார். அவரை ஓய்வெடுக்கும்படி சிவாஜி ராவ் எவ்வளவோ வலியுறுத்திக் கூறினார். ஆனால் அசோக் கேட்கவில்லை. நானும் உங்களுடன் பஸ்சில் வந்து விடுகிறேன் என்று சொல்லியபடி கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டார்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலத்துக்கு அந்த காலத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழகம் 47-ம் எண் கொண்ட பஸ் சேவையை நடத்தி வந்தது. இந்த வழித் தடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதிக பஸ்களை விட்டு இருந்தனர். என்றாலும் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.

    அத்தகைய கூட்டத்தை மனதில் வைத்துதான் அசோக்கிடம் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சிவாஜி ராவ் கூறியிருந்தார். ஆனால் அசோக் கேட்காததால் அவரை சிவாஜி ராவ் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போல 47-ம் நம்பர் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சிவாஜிராவ், அசோக் மற்றும் நண்பர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியே வந்தனர். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து விடலாம் என்று பல தடவை அவர்கள் முயற்சி செய்தபோதும் இடம் கிடைக்கவில்லை. இதனால் அசோக் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை பஸ் தாண்டிக் கொண்டிருந்தபோது அசோக்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த அவர் மயங்கி விழப்போவதை அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் கவனித்து விட்டார். அடுத்த வினாடியே அசோக்கை அரவணைத்துப் பிடித்துக் கொண்டார்.

    உள்ளே ஏறுங்கள்... உள்ளே ஏறுங்கள்... என்று சிவாஜிராவ் அலறினார். இதனால் பயணிகள் பரபரப்பானார்கள். நிலைமையை புரிந்துக்கொண்ட கண்டக்டரும் உதவி செய்தார். ஒரு இருக்கையில் இருந்த பயணிகள் எழுந்து இடம் கொடுத்தனர்.

    அசோக்கை பஸ்சுக்குள் அழைத்து வந்த சிவாஜிராவ் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடி மீது அசோக்கை தலைசாய்த்து படுக்க வைத்துக் கொண்டார். ஜெமினி பாலம் வரை அவர்கள் நிம்மதியாக வந்தனர். இதனால் பஸ்சில் இருந்து இறங்கியதும் தெம்பாக கல்லூரிக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பஸ்சுக்குள் சென்று உட்கார வேண்டும் என்று நினைத்து விட்டால் யாராவது ஒருவர் மயங்கி விழுவது போல் நடித்து காரியத்தை சாதித்துக் கொண்டனர். அடிக்கடி அவர்கள் இப்படி நாடகம் நடத்தி மற்ற பயணிகளை ஏமாற்றி பயணம் செய்தது உண்டு.

    திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர். அதில் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அதுபோல சென்னையில் உள்ள கர்நாடகா என்ஜினீயர்கள் சங்கம் நடத்திய கன்னட நாடகங்களிலும் சிவாஜி ராவ், அசோக், சதீஷ், ரவீந்திரநாத் நால்வரும் நடித்தார்கள்.

    நாடகங்களின் ஒத்திகைகள் பெரும்பாலும் திரைப்படக் கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. திரைப்படக் கல்லூரியில் கன்னட பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியை உஷா இந்த நாடக ஒத்திகைகளை முன்னின்று நடத்தினார். ஏற்கனவே பெங்களூரில் ஏராளமான நாடகங்களில் சிவாஜி ராவ் நடித்திருந்ததால் திரைப்படக் கல்லூரியில் நடந்த நாடக ஒத்திகை அவருக்கு சர்வ சாதாரணமாக இருந்தது.

    ஒரு நாடகத்தில் சிவாஜிராவ் சி.பி.ஐ. அதிகாரியாகவும், மற்றொரு நாடகத்தில் வெட்டியானாகவும் நடித்தார். அவரது நாடக நடிப்புத் திறமையைப் பார்த்து ஆசிரியை உஷா மிகவும் ஆச்சரியப்பட்டார். இவ்வளவு திறமை உள்ள உங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மனம் திறந்து பாராட்டினார்.

    நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி ராவ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதில் அசோக் முதல் மாணவனாக தேர்வானார். என்றாலும் கன்னட பிரிவு மாணவர்களுக்கு ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. அதாவது திரைப்படக் கல்லூரியில் தெலுங்கு மொழி மாணவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல கன்னட மொழி மாணவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்று நினைத்தனர்.

    திரைப்படக் கல்லூரியில் படித்த 36 மாணவர்களில் தெலுங்கு மாணவர்கள் 20 பேர் இருந்தனர். இதன் காரணமாக பயிற்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் தெலுங்கு மொழியில் அதிகம் மேற்கொள்ளப் பட்டது. பயிற்சிக்கான நாடகம் நடத்தப்பட்டா லும் தெலுங்கு மொழி நாடகம்தான் அதிகம் நடத்தப்பட்டது. அதுபோல நடிப்பை கற்றுக் கொள்வதற்கான திரைப்படங்கள் காண் பிக்கப்பட்ட விஷயத்திலும் தெலுங்கு படங்களே அதிகம் இருந்தன.

    இதற்கு கன்னட வகுப்பில் சிவாஜி ராவுடன் படித்த மாணவர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரால் திரைப்படக் கல்லூரியில் சர்ச்சை உருவாகியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜாராம் அவரை அழைத்து விசாரணை நடத்தினார். மொழி ரீதியாக பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி அசோக்கை ஒரு வாரம் சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை சிவாஜி ராவுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக அவருக்கும் தெலுங்கு மொழி பாடப் பிரிவில் படிக்கும் மாணவர் அனந்தராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே யாராவது தன் கண் பார்த்து கோபத்துடன் பேசினால் அது சிவாஜி ராவுக்கு பிடிக்கவே பிடிக்காது.

    தன்னை முறைத்து பார்ப்பவர்களை துவம்சம் செய்து விடுவார். குறிப்பாக தனது கழுத்தில் அணிந்திருந்த சைக்கிள் செயினை கழற்றி அடிப்பதை சிவாஜி ராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னைக்கு மாணவராக வந்து பக்குவப்பட்டு கொண்டிருந்த நிலையில் தெலுங்கு மாணவருடனான மோதல் அவருக்கு மீண்டும் அந்த பழைய குணத்தை எட்டிப் பார்க்க வைத்தது.

    தெலுங்கு மாணவர் அனந்தராமனை அடி பின்னி எடுத்து விட்டார். திரைப்படக் கல்லூரி முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டது. இதனால் சிவாஜி ராவ் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    எப்படியோ திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் முதலாம் ஆண்டு படிப்பு நிறைவு பெற்றது. எல்லா மாணவர்களும் விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர். சிவாஜி ராவும் பெங்களூருக்கு திரும்பினார்.

    அங்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை தயார் செய்யும் வகையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கண்டக்டர் வேலை பார்த்து சம்பாதித்தார். அந்த பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல சேமித்தார்.

    அப்படி ஒரு நாள் அவர் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி நண்பர் சதீஷ் அதே பஸ்சில் பயணம் செய்ய நேரிட்டது. அவருக்கு சிவாஜி ராவை கண்டக்டர் கோலத்தில் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆங்கிலவார்த்தை கலக்காமல் சிவாஜி ராவ் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அழகான கன்னடத்தில் உச்சரித்தது அவரை கவர்ந்தது.

    சதீசை கண்டதும் சிவாஜி ராவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்று என்னோடுதான் நீ சாப்பிட வேண்டும் என்று உரிமையோடு அழைத்து சென்று ஓட்டலில் சாப்பிட வைத்தார். இப்படி விடுமுறைைய கழித்த சிவாஜி ராவுக்கு தன் மனம் கவர்ந்த பஸ் தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவரால் அந்த தோழியை பார்க்க முடிந்ததா? என்பதை நாளை பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
    • சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'கூலி'. இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.

    'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு வாழ்த்து. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • மனிதன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.

    1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின.

    இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். 

    மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
    • அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன

    அமைந்தகரை அருண் ஓட்டலில் 3-வது மாடியில் நண்பர்களுடன் தங்கி இருந்த சிவாஜி ராவ் கல்லூரிக்கு புறப்படும் ஸ்டைலே தனியாக இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து சிகரெட்டை புகைத்தப்படியே வராண்டாவில் வலம் வருவார். மற்ற நண்பர்கள் கண் விழிப்பதற்குள் இரண்டு, மூன்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளி விடுவார்.

    நண்பர்கள் எழுந்து கல்லூரிக்கு தயாராக வேண்டும் என்று குளியல் அறைக்கு செல்ல நினைத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. ஏனெனில் அதற்குள் குளியல் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே சிவாஜி ராவ் தம் அடித்துக் கொண்டு இருப்பார். அது மட்டு மல்ல குளியல் அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு விதவிதமாக நடித்தும் பார்ப்பார்.

    இது அவரது அறை நண்பர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு நாங்கள் எல்லோரும் குளித்த பிறகுதான் நீ குளிக்க வேண்டும் என்று சிவாஜிராவுக்கு நண்பர்கள் உத்தரவிட்டனர். என்றாலும் சிவாஜிராவ் யாருக்காகவும் தனது சுதந்திரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.

    இதனால் அறையில் அவருக்கும், ரவீந்திர நாத்துக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரும் ஜென்ம விரோதிகள் போல சண்டைப் போடுவார்கள். அப்போது சதீசும், அசோக்கும் இடையில் புகுந்து சண்டையை தீர்த்து வைப்பார்கள்.

    ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது மாதிரி சிவாஜி ராவும், ரவீந்திரநாத்தும் கொஞ்சி குலாவியபடி பேசிக் கொள்வார்கள். சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.

    அமைந்தகரையில் இருந்து திரைப்படக் கல்லூரி அமைந்து இருந்த ஜெமினி பாலம் வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவாஜிராவும் அவரது நண்பர்கள் வேணுகோபால், சதீஷ், அசோக் மற்றும் சிலர் தினமும் ஒரே பஸ்சில்தான் பயணம் செய்வார்கள்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. மேத்தா நகர் வழியாக ஒரு வழித்தடம் உள்ளது. அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித் தடம் உள்ளது. இதில் 1973-ல் அமைந்தகரையில் இருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி பாலம் செல்ல 25 காசுகள் கட்டணம் கொடுக்க வேண்டும்.

    அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக செல்லும் பஸ்களுக்கு 30 காசுகள் கட்டணம். சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் தினமும் அந்த 5 பைசாவை மிச்சப்படுத்துவதற்காக மேத்தா நகர் வழியாக செல்லும் பஸ்சில்தான் ஏறுவார்கள்.

    அந்த பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வரும்போது பெரும்பாலான நாட்கள் ரெயில்வே கேட்டில் நிற்க வேண்டியது ஆகி விடும். 1973-ல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே அந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட் திறக்கும்வரை அங்கேயே நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கும்.

    அப்படி சிவாஜி ராவ் வரும் பஸ்களும் ரெயில்வே கேட்டில் சிக்கி விடுவது உண்டு. ஒரு தடவை நுங்கம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டால் மீண்டும் திறப்பதற்கு சுமார் 30 நிமிடங்களாவது ஆகிவிடும். இதனால் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பல நாட்கள் திரைப்படக் கல்லூரி வகுப்புக்கு தாமதமாக சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

    ரெயில்வே கேட் மூடப்படும் நாட்களில் சிவாஜிராவும் நண்பர்களும் பஸ்சில் அடிக்கும் லூட்டிகள் பயங்கரமாக இருக்கும். அந்த சமயங்களில் சிவாஜி ராவை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்பதற்காகவே சில சமயங்களில் "ஏய் கருப்பா?" என்று நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது எல்லாம் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் வந்து விடும்.

    ஒரு தடவை சிவாஜி ராவை பார்த்து பஸ்சில் வைத்து சதீஷ் "டேய் நீ ஏன்டா இவ்வளவு கருப்பாய் இருக்கிறாய்? உனக்கு எப்படி கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும்?" என்று கிண்டல் செய்தார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "டேய் கேலி செய்யாதே? எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன்? என் கையில் கிடைப்பதை தூக்கி அடித்து விடுவேன்" என்று எச்சரித்தார்.

    என்றாலும் சதீஷ் தொடர்ந்து சிவாஜி ராவை பார்த்து கருப்பா.... கருப்பா... என்றே சொல்லி வெறுப்பு ஏற்றினார். பஸ்சில் பல பயணிகள் முன்னிலையில் சதீஷ் செய்த கிண்டல் சிவாஜி ராவுக்குள் குமுறலை ஏற்படுத்தியது. "டேய் விளையாடாதே? என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்று முறைத்தார்.

    அப்போது ஜெமினி பாலம் பஸ் ஸ்டாப் வந்து இருந்தது. நண்பர்கள் அனைவரும் இறங்கினர்கள். அப்போதும் சதீஷ் சிவாஜி ராவை பார்த்து, "கருப்பா வேகமா வாடா?" என்றார். அடுத்த நிமிடம் சிவாஜி ராவ் பாய்ந்து சென்று சதீசை சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.

    "நீ என்ன பெரிய மன்மதனா? எப்போது பார்த்தாலும் என்னை கருப்பா என்கிறாய்? உன் மனதில் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று எச்சரித்தார். சிவாஜி ராவுக்கு வந்த கோபத்தை பார்த்து சதீஷ் ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி ராவிடம் நிறம் பற்றி கிண்டல் செய்து பேசியதே இல்லை.

    சிவாஜி ராவ் கோபப்பட்டாலும் சிறிது நேரத்தில் அதை மறந்து நண்பர்களுடன் கலகலப்பாக பேச ஆரம்பித்து விடுவார். இதனால் கல்லூரியிலும், அருண் ஓட்டலிலும் எப்போதும் நண்பர்கள் அவருடன் இருந்தனர். அந்த நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதுதான் அவரது இரவு நேர பழக்கமாக இருந்தது.

    சிவாஜி ராவிடம் இருந்த சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் தவிர மற்ற அனைத்து பழக்கங்களையும் அவரது நண்பர்கள் ரசித்தனர். குறிப்பாக சினிமா மீது சிவாஜி ராவுக்கு இருந்த வெறியை நினைத்து பிரமிப்பார்கள். எப்போதும் சினிமா நினைப்பிலேயே இருந்த சிவாஜி ராவ் அடிக்கடி அமைந்தகரை லட்சுமி டாக்கீசுக்கு படம் பார்க்க சென்று விடுவார்.

    தமிழில் புதுப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால் சிவாஜிராவ் தவற விட மாட்டார். அன்று முதல் ஆளாக லட்சுமி டாக்கீசில் ஆஜராகி விடுவார். நண்பர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி லட்சுமி டாக்கீசுக்கு சென்று படம் பார்ப்பது அவருக்கு ஒரு பழக்கமாக மாறிப் போனது.

    அமைந்தகரை லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் புதுப்படங்கள் ரீலிஸ் ஆகாத நாட்களில் இடையிடையே பழைய படங்களையும் போடுவார்கள். அந்த படங்களையும் சிவாஜிராவ் விட்டு வைப்பது இல்லை. முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பார்.

    தங்கை, தங்கசுரங்கம், என் தம்பி, திருடன், ராஜா, எங்கள் தங்க ராஜா உள்பட சிவாஜி கணேசன் படங்களில் பெரும்பாலானவற்றை சிவாஜிராவ் லட்சுமி தியேட்டரில்தான் கண்டுகளித்தார். அதுபோல எம்.ஜி.ஆர். நடித்த படங்களையும் அவர் விடாமல் பார்த்தார். எம்.ஜி.ஆர்.- சிவாஜி என்ற இரண்டு இமயங்களும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்ததை அவர் படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆர்வமாக விவாதிப்பார்.

    குறிப்பாக சிவாஜிகணேசனின் நடிப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருந்த சிவாஜி ராவுக்கு அடிக்கடி படம் பார்ப்பதால் கூடுதல் செலவு ஆனது. என்றாலும் சிவாஜிராவ் சாப்பாட்டை தியாகம் செய்து விட்டு கூட லட்சுமி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது உண்டு.

    சில சமயங்களில் சிவாஜி ராவிடம் போதுமான அளவுக்கு கையில் காசு இருக்காது. அதே சமயத்தில் லட்சுமி தியேட்டரில் புதிய படம் வெளியாகி இருக்கும். என்றாலும் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிவாஜிராவ் லட்சுமி தியேட்டருக்கு சென்று சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது உண்டு.

    ஒரு தடவை லட்சுமி தியேட்டரில் அவர் தரையில் உட்கார்ந்து சிவாஜி படத்தை பார்த்து விட்டு வந்தார். அந்த அளவுக்கு சிவாஜி நடிப்பில் அவர் மனதை பறிக் கொடுத்து இருந்தார்.

    லட்சுமி தியேட்டரில் மட்டுமின்றி திரைப்படக் கல்லூரியிலும் சிவாஜி ராவுக்கும், அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி படங்கள் போட்டு காட்டப்படுவது உண்டு. பெரும்பாலும் திரைப்படக் கல்லூரியில் காட்டப்படும் படங்கள் ஆங்கிலப் படங்களாக இருக்கும். ஆலிவுட் நடிகர்கள் சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், கிரிகிரிபெக், ஆண்டனிகுயின், மார்லன்பிராண்டோ ஆகியோரது படங்களை அடிக்கடி காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்.

    அந்த நடிகர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் அனைத்தையும் சிவாஜி ராவ் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதுபோலவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், சத்யன், நாகேஸ்வரராவ் ஆகியோரது படங்களையும் பார்த்து அவர்களிடம் இருந்த தனித்துவத்தை புரிந்து உணர்ந்துக் கொண்டார்.

    சினிமா படங்களை பார்க்க... பார்க்க... அவருக்குள் நடிப்பின் மீதான வெறி விஸ்வரூபமாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற தியேட்டர்களுக்கும் சென்று படங்கள் பார்த்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளின் படங்களும், நடிகர்களின் நடிப்பும் அவரது மனதுக்குள் ஆழமாக பதிந்தன.

    இந்த நிலையில்தான் அமைந்தகரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிவாஜி ராவை போலீசார் சுற்றி வளைத்து அடி பின்னி எடுத்து விட்டனர்.

    அந்த பயங்கர சம்பவம் பற்றி திங்கட்கிழமை (22-ந்தேதி) பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
    • அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது.

    சிவாஜி ராவுக்கு திரைப்படக் கல்லூரி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டது. அதுபோல அமைந்தகரை அருண் ஓட்டலில் நண்பர்களுடன் தங்கி இருந்து கல்லூரிக்கு வந்து செல்வதும் பழக்கத்துக்கு வந்து இருந்தது. நடிப்பு விஷயமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொன்றையும் சிவாஜி ராவ் கூர்மையாக கவனித்து மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார்.

    நடிப்பு பயிற்சி மற்றும் நடன பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்றார். நடிப்பு மீது அவருக்கு இருந்த ஆர்வம் திரைப்படக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் மீது நல்ல மதிப்பை உருவாக்கி இருந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த போதிலும் பணக்கஷ்டம் மட்டும்தான் சிவாஜிராவை படாதபாடுப் படுத்தியது.

    சிவாஜி ராவ் அவ்வளவு கஷ்டத்திலும் பிரிஸ்டல் ரக சிகரெட்டுகளை புகைப்பதை பழக்கத்தில் வைத்து இருந்தார். கல்லூரி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிகரெட் புகைப்பதை அவரால் விடவே முடியவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பணத்தேவை இருந்துக் கொண்டே இருந்தது.

    அந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய அவர் அடிக்கடி பெங்களூருக்கு சென்று பணியாற்றி வருவதை வழக்கமாக மாற்றி இருந்தார். ஒரு தடவை அப்படி அவர் பெங்களூருக்கு சென்று இருந்த போது நண்பர் ராஜ் பகதூரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.

    சிவாஜி ராவுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதை உணர்ந்த ராஜ்பகதூர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி சிவாஜி ராவ் கழுத்தில் போட்டு விட்டார். இதை வைத்துக்கொள். முக்கியமான நேரங்களில் உனக்கு இது கை கொடுக்கும் என்று கூறினார்.

    ராஜ் பகதூரின் தன்னலமற்ற உதவியை கண்கூடாக அனுபவித்த சிவாஜி ராவுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்போது ராஜ்பகதூர் ஒரே ஒரு அறிவுரையை கூறினார். சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொள். நிறைய பணம் மிச்சம் ஆகும் என்றார். மேலும் சுத்தமாக பணம் கையில் இல்லாவிட்டால் இந்த தங்க சங்கிலியை அடகு வைத்து விடு. பிறகு மீட்டுக் கொள்ளலாம் என்றார்.

    ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இனி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு சென்னைக்கு திரும்பி வந்தார். ஆனால் வழக்கம் போல சென்னையில் சிவாஜி ராவுக்கு பணக்கஷ்டம் தொடர் கதையாகவே இருந்து கொண்டு இருந்தது.

    இதன் காரணமாக அருண் ஓட்டலில் தங்கி இருந்த நண்பர்களுடன் அவர் பல தடவை சண்டைப் போட்டு இருக்கிறார். குறிப்பாக ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் சிவாஜி ராவ் அதை கண்டு கொள்ளமாட்டார். அவரது விருப்பப்படி செயல்பட்டு கொண்டே இருந்தார்.

    அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வேணுகோபால் அறையில் சிவாஜிராவ் 4-வது நபராக இருந்தார். ஓட்டல் முதலாளி வரும் போது அவரது கண்களில் படாமல் சிவாஜி ராவ் ஒளிந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன.

    நாளடைவில் அருண் ஓட்டல் சிவாஜி ராவ் வீடு போலவே மாறிப் போனது. ஆனால் அவரிடம் இருந்த மூன்றே மூன்று உடைகளை மட்டுமே அவர் மாற்றி மாற்றி உடுத்த வேண்டி இருந்தது. இது ரவீந்திரநாத்துக்கு பிடிக்கவில்லை.

    "டேய் என்னடா ஒரே டிரஸ்சை போட்டுக் கொண்டே இருக்கிறாய்" என்று ரவீந்திரநாத் கிண்டல் செய்வார். இதனால் சிவாஜி ராவ் தனது கண்ணில் யார் உடை தென்படுகிறதோ அந்த உடையை எடுத்து அணிந்துக் கொண்டு சென்று விடுவார். இதனால் ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் மோதல் அதிகரித்தது.

    ஒரு தடவை ரவீந்திரநாத் இதுபற்றி வேணுகோபாலிடம் புலம்பித் தள்ளினார். "சிவாஜி ராவ் உடைகளை சரியாக துவைப்பது இல்லை. ஒழுங்காக பல் துலக்குவது இல்லை. இவனை வைத்துக் கொண்டு இன்னும் என்ன கஷ்டம் எல்லாம் அனுபவிக்க போகிறோமோ. அவன் உள்ளாடைகளை கூட துவைப்பது கிடையாதாம்" என்றார்.

    அவரை வேணுகோபால் சமரசம் செய்தார். "விடு பார்த்துக் கொள்ளலாம்" என்பார். சிவாஜி ராவ் மீது இருந்த பாசம் மற்றும் இரக்கம் காரணமாக வேணுகோபால் எதையும் கண்டு கொள்வது இல்லை.

    ஒருநாள் சிவாஜி ராவ் புறப்பட்டு சென்றதும் வேணுகோபாலிடம் சென்ற ரவீந்திரநாத் இனியும் பொறுக்க முடியாது என்று கொந்தளித்தார். ஏன் என்ன நடந்தது என்று வேணுகோபால் கேட்டபோது, "இன்று நமது அறையில் நடந்ததை நீ அறிந்தால் உனக்கே கோபம் வந்து விடும்.

    உனது டூத்பிரசை பயன்படுத்திதான் இன்று சிவாஜி ராவ் பல் துலக்கினான். உனக்கு தெரியுமா?" என்று ரவீந்திரநாத் கூறினார். இதை கேட்ட பிறகு வேணுகோபாலுக்கு என்னவோ போல் இருந்தது. அன்று இரவு அவர் சிவாஜி ராவை அழைத்தார். நான் சொல்வதை பதில் சொல்லாமல் பொறுமையாக கேட்க வேண்டும் என்று கூறி அறிவுரைகள் சொல்லத் தொடங்கினார்.

    ஒரு அறையில் நாம் நான்கு பேர் இருக்கிறோம். எனவே சுத்தமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுக்கக் கூடாது. அதுதான் நாகரீகம். உனக்கு நடிப்புப் பயிற்சிப் பெறுவதில் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் உடைகள் விஷயத்திலும், பழகும் விஷயத்திலும் நீ மாற்றங்கள் செய்தே ஆக வேண்டும்" என்றார்.

    அதோடு வேணுகோபால் விடவில்லை. தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை சொன்னார். அதை கேட்க...கேட்க... சிவாஜி ராவுக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. தெரியாமல் செய்து விட்டேன். இனி இதுபோல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

    அன்று முதல் சிவாஜி ராவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மற்றவர்கள் பொருளை தொடுவதை குறைத்துக் கொண்டார். குறிப்பாக மற்றவர்கள் உடைகளை அணிவதை முற்றிலுமாக தவிர்த்தார்.

    மற்றவர்களை போல நாமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களை செய்ய தொடங்கினார். சிவாஜி ராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவருடன் படித்த திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    என்றாலும் அவரது பிடிவாதமும், முரட்டு குணம் மட்டும் மாறவில்லை. சில விஷயங்களில் என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் விடா பிடியாக இருந்தார். அதிலும் கண்டக்டராக பணிபுரிந்த போது செய்த ஸ்டைல்கள் அனைத்தும் அப்படியே அவரிடம் தொடர்ந்தன.

    தங்கி இருந்த அறையில், பஸ்சில், திரைப்படக் கல்லூரியில், சாப்பிடப் போகும் இடங்களில் எங்கு கண்ணாடி இருந்தாலும் அதன் முன்பு நின்று தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டுக் கொள்வார். அந்த ஸ்டைலில் உடலை அப்படியும், இப்படியுமாக அசைத்து பார்த்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வார். இந்த பழக்கத்தை மட்டும் அவர் எத்தனையோ பேர் கேலி-கிண்டல் செய்தாலும் விடவே இல்லை.

    ஒருநாள் திரைப்படக் கல்லூரியில் நடனப் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் புதிய நடனத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அந்த பயிற்சி வகுப்பு முடிந்ததும் அவர் இந்த நடனத்தில் கால் அசைவு முக்கியமானது. நாளை நான் உங்கள் அனைவரின் கால் அசைவுகளை பார்க்க வேண்டும். எனவே நாளை நீங்கள் வகுப்புக்கு வரும்போது கால்சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றார்.

    சில மாணவர்கள் அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களிடம் கால் சட்டை இல்லை என்றனர். ஆனால் நடனப் பயிற்சி ஆசிரியர் கேட்கவில்லை. கால்சட்டை அணிந்து வராவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்தார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகுந்த பயமாகி விட்டது.

    அவரிடம் கால்சட்டை எதுவும் கிடையாது. மாத கடைசியில் கையில் பணம் இல்லை. கால்சட்டை எப்படி முடியும் என்று யோசித்தார். யாரிடமும் கேட்கவும் அவருக்கு மனம் வர வில்லை.

    நடப்பது நடக்கட்டும் என்று மறுநாள் சிவாஜிராவ் பேண்ட் அணிந்துக் கொண்டு நடனப் பயிற்சி வகுப்புக்கு சென்றார். அதை கண்டதும் நடனப்பயிற்சி ஆசிரியருக்கு கோபம் வந்தது. சிவாஜி ராவை பார்த்து, "நீ வெளியே போ. கால்சட்டை இருந்தால் உள்ளே வா..." என்றார். சிவாஜி ராவ் கொஞ்சமும் யோசிக்கவில்லை. தனது பேண்ட்டை கழற்றினார். உள்ளாடையுடன் வகுப்பறையில் நின்றார்.

    அவர் அணிந்து இருந்த அண்டர்வேர் நீளமான டிராயர் போல இருந்தது. அதை கண்டதும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் சிவாஜி ராவ் கண்டுகொள்ளவில்லை. அந்த உள்ளாடையுடன் நடனம் ஆடி அன்றைய பயிற்சி வகுப்பை சமாளித்தார். சிவாஜி ராவின் இந்த செயலை அவரது நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு சொல்லி... சொல்லி சிரிப்பது உண்டு.

    இந்த நிலையில் சிவாஜி ராவின் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை அவருக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுப்பதாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கு பெற்ற பயிற்சியோடு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களிலும் பயிற்சி பெறும் களமாக சென்னை வாழ்க்கை அமைந்தது. அவருக்கு இருந்த ஒரே பிரச்சினை பணப்பிரச்சினைதான்.

    ஒரு தடவை திரைப்படக் கல்லூரியில் தொடர்ந்து படிப்பதற்கு கட்டணம் செலுத்த முடியாத மிகுந்த அவல நிலைக்கு சிவாஜிராவ் தள்ளப்பட்டார். அனைவரும் கல்லூரிக் கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் சிவாஜி ராவ் மட்டும் இனி படிக்க முடியுமா? என்ற பரிதாப நிலையில் தவித்தார்.

    என்ன செய்வது என்று மனக்குழப்பத்துடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது.

    அது என்ன ஆச்சரியம் என்பதை நாளை காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தை யார் இயக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு சிலர் இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன்.
    • 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.

    விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். இந்த படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார்.

    தொடர்ந்து ரஜினிகாந்திடம் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

    முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
    • கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. இதையடுத்து இவர்களின் கூட்டணியில் அடுத்த படம் எப்போது? என்ற கேள்வி எழுந்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    ×