என் மலர்

    நீங்கள் தேடியது "Asia Cup 2025"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
    • பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.

    போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
    • 2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.

    அவர் 58 பந்தில் 107 ரன்கள் குவித்தார். குசால் பெரேரா 32 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஷனகா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி "டை"யில் முடிவடைந்தது.

    இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 2 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

    இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.

    2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

    2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

    தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • நிஷாங்கா 107 ரன்கள் விளாசியதால் போட்டி "டை"யில் முடிந்தது.

    ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் பதுன் நிஷாங்காவின் சதத்தால் (107) இலங்கை இமாலய இலக்கை நெருங்கியது. சரியாக 202 ரன்கள் அடித்ததால், போட்டி "டை" யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஷனகா பேட்டிங் பிடித்தார். துல்லியமாக ஆஃப்சைடு யார்க்கராக வீசப்பட்ட ஷனாகா அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டிங் பட்டது போன்று சத்தம் கேட்டதால் நடுவர் அவுட் கொடுத்துவிடுவார்.

    அதேவேளையில் ஷனகா ரன் எடுக்க ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சரியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுவார். இதனால் ரன்அவுட்டுக்கு அப்பீல் கேட்பார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கமாட்டார்.

    ஐசிசி விதிப்படி அம்பயர் அவுட் என கையை உயர்த்திவிட்டால், வீசப்பட்ட பந்து அத்துடன் Dead ஆகிவிடும். அதன்பின் எந்தவிதமான செயல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதுபோன்றுதான் நடுவர் அவுட் கொடுத்த பிறகு, ரன்அவுட் செய்ததால் அவுட் கொடுக்கப்படவில்லை.

    ஷனாகா உடனடியாக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வார். ரீபிளேயில் பந்து பேட்டில் படாமல் செல்லும். இதனால் நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டு, ஷனாகா பேட்டிங் செய்தார்.

    இலங்கை சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுத்தது. இந்தியா அதை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
    • பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் வீராட் கோலியை முந்தி பதும் நிசங்கா புதிய சாதனையை படைத்துள்ளார்.

    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 429 ரன்கள் குவித்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. தற்போது பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

    அபிஷேக் ஷர்மா 6 போட்டிகளில் விளையாடி 309 ரன்கள் குவித்து இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
    • ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 202 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது, குசால் பெராரா அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.

    சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் கடந்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்கள் விளாசினார்
    • சுப்மன் கில் 4 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    சுப்மன் கில் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன் 23 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஹல்காம் குறித்து பேசியதற்காக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
    • அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.

    லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

    இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதன்மூலம் ரிஸ்வான், விராட் கோலி சாதனை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 22 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இதன்மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான், விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    டி20 ஆசிய கோப்பைப் பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    289* - 2025-ல் அபிஷேக் சர்மா (6 இன்னிங்ஸ்)

    281 - 2022-ல் முகமது ரிஸ்வான் (6 இன்னிங்ஸ்)

    276 - 2022-ல் விராட் கோலி (5 இன்னிங்ஸ்)

    196 - 2022-ல் இப்ராஹிம் ஜத்ரான் (5 இன்னிங்ஸ்)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
    • இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.
    • காயத்தை தவிர்ப்பதற்காகவே பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முகமது கைப் கூறினார்.

    ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் 28-ந் தேதி மோதவுள்ளது.

    முன்னதாக இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓமனுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஓய்வெடுத்தார். மற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார்.

    இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முந்தைய கேப்டன்கள் அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தி எதிரணியை சாய்ப்பதற்காக பவர்பிளேவில் குறைவாக பயன்படுத்துவார்கள்.

    அதே சமயம் முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா தான் வீசுவார். ஆனால் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கும் சூர்யகுமார் பவர் பிளேவில் பும்ராவை 3 ஓவர்கள் வீச வைத்து விடுகிறார்.

    இந்நிலையில் காயத்தை தவிர்ப்பதற்காகவே ஜஸ்ப்ரித் பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முன்னாள் வீரர் முகமது கைப் குற்றம் சாட்டினார். இது போன்ற நகர்வு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.

    இது குறித்து கைப் கூறியதாவது:-

    ஜஸ்ப்ரித் பும்ரா பொதுவாக ரோகித் தலைமையில் 1, 13, 17, 19-வது ஓவர்களை போடுவார். ஆனால் சூர்யகுமார் தலைமையில் ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.

    இப்போதெல்லாம் காயத்தை தவிர்ப்பதற்காக பும்ரா தன்னுடைய உடல் தயாராக இருக்கும் போதே பவுலிங் செய்ய விரும்புகிறார். ஆனால் எஞ்சிய 14 ஓவர்களில் பும்ரா 1 ஓவர் மட்டுமே வீசுவார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். இது உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு வலியைக் கொடுக்கலாம்.

    என்று கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜஸ்ப்ரித் பும்ரா "இதற்கு முன்பும் தவறானது. மீண்டும் தவறாக இருக்கிறது" என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அதாவது அன்றும் இன்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போலவும் கேப்டனின் விருப்பத்திற்கு இணங்க அணிக்காக பந்து வீசுவதாக பும்ரா தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி.
    • இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர்-4 சுற்று போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது.

    வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

    இந்த மாதிரியான ஆட்டங்களில் நீங்கள் வெற்றி பெற முடிந்தால், நீங்கள் ஒரு சிறந்த அணியாக இருக்க வேண்டும்.

    அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் உழைப்போம். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் பந்து வீசிய விதம் சிறப்பா னது. வெற்றி பெறுவதற்கான வழிகளை நாங்கள் கண்டு பிடித்து வருகிறோம்.

    இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி. இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம். இந்தியா உட்பட எந்த அணியையும் வெல்லும் குணம் எங்களது அணிக்கு உள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் ஆட்ட நாயகன் விருது வென்ற வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி கூறும் போது, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட் டியை எதிர்நோக்கி இருக்கிறோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ×