என் மலர்

    நீங்கள் தேடியது "Bollywood actor"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமிதாப் பச்சன் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார்.
    • ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.

    சினிமா என்பது சாமானியர்களுக்கு புலப்படாத ஒரு நிழல் உலகம் ஆகும். அதிலும் பாலிவுட் சினிமா எலைட் தன்மை தொக்கி நிற்கும் ஒரு மாயக் களம்.

    திரைபிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் லக்ஸுரி வாழக்கை குறித்து அரசல் புரசல்கள் அவ்வப்போது துண்டு செய்திகள் மூலம் தெரியவருவது வழக்கம்.

    அதுவும் ஆங்காங்கு பொதுவெளியில் மனம் திறக்கும் Insider-களின் மூலம் வெகுமக்களை மலைக்கவைக்கும் சில தகவல்கள் கசியும்.

    அந்த வகையில் சில பாலிவுட் ஜெயண்ட் நடிகர்களின் அலம்பல்கள் குறித்து ஷூட்அவுட், மும்பை சாகா, ஜிந்தா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் குப்தா சில விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.

    அண்மையில் பங்கேற்ற பாட்கேஸ்ட் ஒன்றில் நடிகர்கள் செலவு குறித்து தயாரிப்பார்கள் புலம்பல் பற்றி பேசிய குப்தா, அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் ஒரே ஒரு மேக்அப் பாய் உடன் எளிமையாக இருப்பார்கள். அமிதாப் பச்சன் எல்லாம் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்.

    ஆனால் எனக்கு தெரிந்த சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கென கட்டாயம் 6 வேனிட்டி கேரவன்கள் வேண்டும் என கொருவர். ஆமாங்க சீரியஸா உண்மைதான். 6 வேன்கள்!

    ஒரு வேன் அவர்கள் தனியாக இருப்பதற்கு, அதாவது அவர்கள் அதில் நிர்வாணமாக கூட அமர்ந்துகொண்டு Chill செய்வார்கள். மற்றொரு வேன் மேக்அப் போடுவதற்கு, அடுத்தது உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அடங்கிய ஜிம் வேன், மற்றொன்று வருபவர்களை சந்திக்கும் மீட்டிங் பர்பஸ்க்கு, அடுத்தது அமர்ந்து சாப்பிட தனியாக ஒரு வேன், கடைசியாக ஒரு வேன், அது இந்த மற்ற 5 வேன்களில் பணி செய்யும் தங்கள் உதவியார்கள் இருப்பதற்கு, ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.

    ஜிம் வேன் என்றால் அதில் டிரெய்னர்கள் இருப்பார்கள், மேக்கப் வேன் என்றால் மேக்அப் ஆர்டிஸ்ட்கள், அந்த ஆர்டிஸ்ட்களின் அசிஸ்டண்டுகள் என இருப்பார்கள். இந்த செலவு மொத்தமும் தயாரிப்பாளர் தலையில் தான் என்று தெரிவித்தார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தொண்டு நிறுவன நிதி திரட்டல் கிரிக்கெட் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.

    இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூன் 20ம் தேதி “சீதாரே ஜமீன் பர்” வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான்.
    • லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம்.

    லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர். கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", மற்றும் விஜய்யுடன் "மாஸ்டர்", "லியோ" மற்றும் கார்த்தியுடன் "கைதி" போன்ற அதிரடி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை எடுத்தவர்.

    இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    வரும் ஜூன் 20ம் தேதி "சீதாரே ஜமீன் பர்" வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்த தகவல் உறுதிப்படுத்தினார்.

    அப்போது அவர்,"லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம். இது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம். அது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும்," என்றார்.

    2014-ம் ஆண்டு வெளியான தனது நகைச்சுவை படமான"பிகே" படத்தின் தொடர்ச்சி குறித்த செய்திகளை ஆமிர் கான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க "பிகே" இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாக அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு திரும்பினார்.
    • நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நேற்று (திங்கள்கிழமை) மாலை, ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்கு அந்தப் பெண் வந்து, அவருக்கு உடைகள் மற்றும் பரிசுகளை வழங்க வந்ததாக கூறியுள்ளார். நடிகருடன் முன்கூட்டியே ஒரு சந்திப்பு இருப்பதாக அவர் கூறிய பிறகு, வீட்டுப் பணிப்பெண் அப்பேனை உள்ளே அனுமதித்தார்.

    வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு வந்த பிறகு, ஊழியர்கள் அந்தப் பெண்ணின் வருகை குறித்து அவருக்குத் தெரிவித்தனர். இருப்பினும், அப்பெண் யார் என்று தனக்குத் தெரியாது என்று கபூர் கூறியுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த வீட்டு ஊழியர்கள், அவர் ஆதித்யாவை நெருங்க முயன்றபோது அவரைத் தடுத்தனர்.

    உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரின் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

    மும்பையில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
    • நடிகர் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதவிட்டிருப்தாவது:-

    புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.

    இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது.

    மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. அது மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
    • 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.

    மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் மகனுடன் ஐஎஸ்பிஎல் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி போலி என தெரிய வந்துள்ளது.

    மும்பை:

    பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, 81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் தான் உண்மையில் அபிஷேக் பச்சனுடன் ஐஎஸ்பிஎல் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படவில்லை என அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்தார். நலமுடன் இருக்கிறேன். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி போலியானது என்றார்.

    அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
    • சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் கோவிந்தா இண்டர்வியூ செய்தார்.

    90களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. தற்போது 61 வயதாகும் கோவிந்தா பாலிவுட் வட்டாரங்களில் தனது அனுபவங்களைப் பற்றி பிரஸ்தாபித்து வருகிறார்.

    அவ்வப்போது தனது கருத்துக்களுக்காக சினிமா பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இடம் பிடிப்பார். அப்படிதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறி டிராலுக்கு உள்ளானார்.

    ஆனால் கோவிந்தா 90 களில் மார்க்கெட் உள்ள கதாநாயகன் என்பதையும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தனக்கு வந்த ரூ.100 கோடி பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கோவிந்தா உச் கொட்டியுள்ளார்.

    பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, ரூ.100 கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுகிறேன். எனக்கு வேலை இல்லை என்று அவர்கள்(பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். நானோ ரூ.100 கோடி படத்தை விட்டுவிட்டேன்.

    இதற்காக நான் என்னை கண்ணாடியில் பார்த்து அந்த பிராஜெக்டை மறுத்ததற்காக என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கூறினார். இந்த காலத்தில் கிளிக் ஆகும் பாத்திரம் இந்தப் படத்தில் இருந்தது என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    ×