என் மலர்

    நீங்கள் தேடியது "Spain"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

    இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த பந்தயங்களின் அட்டவணை விவரம் வருமாறு:

    செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H

    செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை

    அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:

    அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்

    என மொத்தம் 4 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
    • ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.

    தஜிகிஸ்தானில் நடைபெற்ற CAFA நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், FIFA வெளியிட்ட தரவரிசையில், ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.

    எட்டு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பிளே-ஆஃப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அக்டோபரில் நடைபெறும் AFC ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா அடுத்ததாக மோத உள்ளது.

    இதனிடையே, FIFA நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜென்டினா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில், நெதர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, இத்தாலி ஆகியவை முறையே அடுத்தடுத்து இடங்களை பிடித்து முதல் 10 இடங்களில் உள்ளன.

    நான்கு முறை உலக சாம்பியனான ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
    • சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.

    மாட்ரிட்:

    காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.

    அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 69வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

    வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

    ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 45-வது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது.

    61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138-வது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.

    இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது முறையாக இந்த பட்டத்தை வென்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
    • இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயினில் இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள மின்சார ரெயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உள்பட போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள் முடங்கின.

    மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மின் வெட்டு பாதிப்பு அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகலிலும் உணரப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.

    இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

    இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வந்த ஒரு லெட்டர் குண்டு வெடித்தது.
    • அமெரிக்க தூதரகத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டில் முக்கிய தலைவர்களை மிரட்டும் வகையில் அனுப்பப்பட்ட லெட்டர் குண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் லெட்டர் குண்டு கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் நேற்றும் இன்றும் 4 குண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதையடுத்து பொதுத்துறை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வந்த ஒரு லெட்டர் குண்டு வெடித்தது. கடிதங்களை கையாளும் ஊழியர் காயமடைந்தார். வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தூதரகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாட்ரிட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு பை கிடந்தது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தபால் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற வெடிபொருட்களை ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சகம், ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய செயற்கைக்கோள் மையம் மற்றும் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட கையெறி குண்டுகளை தயாரிக்கும் ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிற்கு அனுப்பியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்க நடவடிக்கை
    • கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி மீட்பு.

    மேட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் கவனித்த அந்த வழியே சென்றவர், பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது குறித்து அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


    இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழை காரணமாக உடல்களை மீட்கும் முயற்சி தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
    • சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு

    உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார்.
    • சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டதால் அவருக்கு குடியுரிமை

    ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.

    இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அமைப்பு எடுத்து வருகிறது.

    கடந்த செப்டம்பரில் 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண்ணான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்பவர் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக இந்த அமைப்பு அவரை கைது செய்தது. காவலில் இருந்தபோது காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

    இந்த கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஃபைட் வேர்ல்ட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க போட்டியில் (FIDE World Rapid and Blitz Chess Championship) ஈரான் நாட்டை சேர்ந்த 26 வயதான சரசதத் கதேமல்ஷரி (Sarasadat Khademalsharieh) பங்கேற்றார்.

    அப்போது அவர், ஈரான் நாட்டின் பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமான ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார். இதனையடுத்து அந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஈரானில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் சரசதத் இதற்கு அஞ்சவில்லை. தன் நாட்டின் மத அடிப்படைவாத தலைமைக்கு கீழ்படியாமல் வாழ்வதையும் அவர் மாற்றி கொள்ள விரும்பவில்லை. 2023 ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு அவர் குடிபெயர்ந்தார்.

    தற்போது அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் குடியுரிமை வழங்கியிருக்கிறது. சரசதத்தின் வழக்கில் சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று ஸ்பெயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது.

    ×