என் மலர்

    நீங்கள் தேடியது "AjithKumar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

    இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த பந்தயங்களின் அட்டவணை விவரம் வருமாறு:

    செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H

    செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை

    அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:

    அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்

    என மொத்தம் 4 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஷ்வரி நடித்திருந்தார்.
    • கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.

    அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, "அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா. வாழ்க்கையில் உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வருவேன் என்று கூறினார். அதை கேட்டதும் என் மனசே உடைச்சிடுச்சு" என்று தெரிவித்தார்.

    இதை கேட்டு அருகில் இருந்த நடிகை மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். மகேஸ்வரியும் மீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
    • பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.

    இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே, அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அஜித்,‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள்" என்ற கருத்தை முன் வைத்தார்.

    இந்நிலையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற அச்சிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2000-ம் ஆண்டு அஜித்குமார் - ஷாலினி திருமணம் செய்துகொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

    அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஜை ஒன்றில் அஜித்குமார் காலில் விழ ஷாலினி முயல்கிறார். அதை அஜித் வேண்டாம் என்று கூற, சுற்றி உள்ளவர்கள் காலில் விழுமாறு கூறுகிறார்கள். இதனையடுத்து ஷாலினி அஜித்குமார் காலில் விழுந்து வணங்குகிறார். உடனே அஜித்குமார் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்ற கூற சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • 2-வது நாளான இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

    இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் இன்று மாலை 5.30 மணிக்கு அவர்களை ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்ததாக தெரிகிறது.

    2-வது நாளான இன்று காலை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அஜித்குமார் கொலை வழக்கில் நெருக்கடி கொடுத்த மேலதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் போலீஸ்காரர்களிடம் பெற்றதாக தெரிகிறது.

    இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்வபாண்டி, கைதாகியுள்ள 5 போலீஸ்காரர்களுக்கு இன்று, நாளையும் என 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 போலீஸ்காரர்களை ஆஜர்படுத்த வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரையும் விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் காவலா ளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமான தாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்கு மாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ் காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும், மானா மதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ், சுமார் 50-க்குமு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் விதிமீறல்கள் இருப் பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரமும் இருப்பது தெரிய வருகிறது.

    சட்டவிரோத காவல் மரணங்கள் தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் நீதியை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர, சந்தேகிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.

    இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரே வழக்கை விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது எனும் சந்தேகம் எழுவதாலேயே சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும், சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். இவர் பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்தார்.

    விசாரணையை தொடங்குவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தனர். அவர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையில் மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று முதல் விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். முன்னதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மதுரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

    முன்னதாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்த ஆவணங்களையும் அவர்கள் கோர்ட்டில் இருந்து முறைப்படி இன்று பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் உதவியாக விசாரணை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    தற்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
    • ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.

    சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைப்பாவையாக உள்ளது.

    * அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?

    * சாத்தான்குளம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?

    * சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கு அவமானம் இல்லையா?

    * ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?

    சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று த.வெ.க.வினர் முழக்கமிட்டனர்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா?

    * திருப்புவனம் அஜித்தை தவிர லாக்அப் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் sorry சொல்லாதது ஏன்?

    * அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?

    * தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது 

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×