துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆசிய கோப்பை இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.