என் மலர்

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
    • ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

    சிட்னி:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.

    தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

    இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:

    ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.

    எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

    எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.

    இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தோனேசியாவில் எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
    • அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    ஜகார்த்தா:

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று இந்தோனேசியா. இங்கு சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    இது அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும். எனவே எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அப்போது தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பாராளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எனவே போராட்டத்தைக் கலைக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களுக்கு இடையே போலீஸ் கவச வாகனம் தறிகெட்டு ஓடியது. இதில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாண்டுங், யோககர்த்தா, மக்காசர் ஆகிய நகரங்களுக்கும் போராட்டம் பரவியது.

    அதன் ஒரு பகுதியாக மக்காசரில் உள்ள நகர்மன்ற அலுவலகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அந்தக் கட்டிடம் கொழுந்து விட்டு எரிந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தச் சம்பவத்தில் 3 அரசு ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தோனேசிய எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
    • இது அந்த நாட்டின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் உள்ள எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இது அந்த நாட்டின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

    இதுதவிர பல்வேறு சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களது சம்பளத்தைக் குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

    எனவே போராட்டத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பதியில் ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.
    • மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது.

    பாராளுமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏற முயன்றதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியைச் சேர்ந்த ராம் சங்கர் பிந்த், வெள்ளிக்கிழமை காலை, பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.

    அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தி, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது. விசாரணையின் போது எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரமும் கிடைக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.

    விசாரணையின் போது, ராம் சங்கர் பிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற வளாகத்தில் அத்துமீறி மர்ம நபர்கள் ஊடுருவதை தடுப்பதற்காக 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்கு சாவல் விடும் வகையில் இன்று காலை 6 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பாராளுமன்ற வளாக சுற்றுச்சுவர் ஓரம் இருந்த மரத்தில் ஏறி சுவரை தாண்டி உள்ளே குதித்தார்.

    இதை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பார்த்து உடனடியாக அவரை பிடித்தார். அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பாராளுமன்ற வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வழி செய்யும் மசோதா.
    • மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு (Online Gaming Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த அல்லது முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்யும். அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படாது. பணம் வைத்து கேமிங்கை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.

    அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பீகார் மாநில SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபட்ட நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
    • மேல்சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
    • டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இதுவரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

    கடுமையான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படும் பிரதமர், மத்திய மந்திரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி தானாகவே பறிக்கப்படும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தப் புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னரும் சுமார் 6 மாத காலம் சிறையில் இருந்தபடியே டெல்லி அரசை வழிநடத்தினார்.

    இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
    • தொடர் அமளியால் மக்களவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மக்களவையில் மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்துதுள்ளார்.

    இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது. இதன்படி, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள், அந்த நேரம் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்ற தீவிர குற்றச்சாட்டுகளின்படி கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட வடிவை வழங்குகிறது.

    இதனால், கைது செய்யப்பட்ட 31-வது நாள் முதலமைச்சர் ஆனவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பலாம். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் அல்லது அமைச்சர்களை லெப்டினன்ட் கவர்னர் பதவி நியமனம் செய்யும்போது, அதனை தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள், பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமித்ஷா கூறினார்.

    இதனால், இரு அவைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுடைய ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    • இந்த மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பீகார் வாக்காளர் திருத்த விவகாரத்தால் பாராளுமன்ற மக்களவை கூடியதும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிற்பகல் 12 மணிக்கு பிறகு அவை மீண்டும் கூடியதும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா தாக்கல் ஆனது. மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல, மாநிலங்களவையிலும் பீகார் வாக்காளர் திருத்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
    • இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.

    ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

    குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

    எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து விவாதம் நடைபெற்றது.
    • எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தில் விண்வெளி வீரர் ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி பீகார் மாநில SIR விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாட்டின் பெருமைய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, அவை நடைபெறாமல் தடுங்கல் ஏற்படுத்தியது மிகவும் துரதிருஷ்டவசமானது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஷித் பாரத் விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    ×