என் மலர்

    இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
    • பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்பட்டுள்ளன.

    சென்னை:

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை தயாரித்து உள்ளனர்.

    இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை முதல் 22-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 22-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சனை தொடங்கியது.
    • கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது.

    திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்ணின் குணத்தை பார்ப்பதில்லை, அவளது நிறத்தைதான் பார்க்கிறார்கள். மணப்பெண் கொண்டு வரும் வரதட்சணையையும், சீர் வரிசைகளையும்தான் பார்க்கிறார்கள்.

    அந்த வகையில் கருப்பு நிறமாக இருப்பதால் தனது மருமகளை மாமியார் தனது வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

    அங்குள்ள பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது.

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சனை தொடங்கியது. கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது. மாமனார், மாமியாரும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

    திருமணத்தின்போது 25 பவுன் தங்கநகையும், ரூ.12 லட்சமும் கோபிலட்சுமியின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கருப்பாக இருப்பதால் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபிலட்சுமியை வீட்டை விட்டு மாமியார் விரட்டி விட்டதாக தெரிகிறது.

    இதை கண்டித்து கோபிலட்சுமி தனது கணவர் வீட்டின்முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே கணவரும் மாமனார், மாமியாரும் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதையடுத்து கோபிலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கணவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
    • விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.

    டிஜிட்டல் கைது மோசடி கும்பலின் வலையில் சிக்கிய அவர், பெங்களூருவில் உள்ள தனது வீடு மற்றும் நிலத்தை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.

    பெங்களூருவின் விக்னம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு, கடந்த ஜூன் மாதம் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஆதார் எண் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதாக மிரட்டியுள்ளனர்.

    மும்பை காவல்துறை அதிகாரிகள் போல நடித்த கும்பல், அந்தப் பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாக வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து மிரட்டியுள்ளனர். அவரது 10 வயது மகனை குறிப்பிட்டும் மிரட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    இந்த மிரட்டலுக்கு பயந்து, ஜூன் முதல் நவம்பர் வரை சுமார் சிறிது சிறிதாக மொத்தம் 2.05 கோடி ரூபாய் பணத்தை அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.

    இந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இது தவிர வங்கிக் கடனும் வாங்கியுள்ளார்.

    இறுதியாக தடையின்மை சான்றிதழ் (NOC) வாங்க காவல் நிலையம் வைட்ஃபீல்ட் காவல் நிலையம் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

    கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்களால் சுமார் 5,474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?
    • வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்கத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தை போல மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலரான சூர்யா தே என்பவரின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

    தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை கண்டிக்கவும் கவுன்சிலர் சூர்யா தே தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்றார்.

    அங்கிருந்த அதிகாரிகளிடம், "அரசு என்னை இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால், முறைப்படி இப்போது என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்" என கூறி வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    "நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?" என்று சூர்யா தே கேள்வி எழுப்பியுள்ளார்.

    நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
    • கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க முடிவு செய்த அவர் கந்துவட்டி நபர்களிடம் தலா 50 ஆயிரம் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி மட்டுமே உயர்ந்து, ஒரு கட்டத்தில் மொத்த கடன் தொகை 74 லட்சம் ரூபாயாக எகிறியது.

    கடனை அடைக்க தனது 2 ஏக்கர் விவசாய நிலம், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என அனைத்தையும் விற்றுள்ளார். இருப்பினும் கடன் தீரவில்லை.

    கந்துவட்டி கும்பலின் மிரட்டல் அதிகரித்ததால், அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் பேரில், இடைத்தரகர் மூலம் கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

    இவ்வளவு செய்தும் இன்னும் கடன் தீரவில்லை எனக் கூறி கந்துவட்டி கும்பல் மிரட்டுவதால், காவல்துறையை நாடி தனக்கு நீதி வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.

    போலீசில் புகார் செய்த பிறகும் அவர்கள் கவலைப்படவில்லை என்று குற்றம்சாட்டிய விவசாயி தனக்கு நீதி கிடைக்காவிட்டால், மும்பையின் மந்திராலயாவில் உள்ள மாநில தலைமையகத்தின் முன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்வர்களிடம் உதவிக்காக கெஞ்சினார்.
    • சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.

    கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மனிதர்கள்களின் அலட்சியத்தால் சக மனிதர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பெங்களூரு பாலாஜி நகரில் வசித்த மெக்கானிக்காக வெங்கடரமணன் (34) நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கடுமையான மார்பு வலியை உணர்ந்தார்.

    உடனடியாக அவரது மனைவி, தனது கணவரை பைக்கில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பினர்.

    அவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு ஈசிஜி எடுக்கப்பட்டு, அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும், அவசர சிகிச்சை அளிக்கவோ அல்லது ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யாமல், ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தம்பதியினர் மீண்டும் தங்கள் பைக்கில் புறப்பட்டனர். வழியில், அவர்களின் பைக் விபத்துக்குள்ளானது.

    இதனால், வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்ற வாகனத்தில் சென்ற ஒவ்வொருவரிடமும் உதவிக்காக கெஞ்சினார்.

    சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் பைக்குகள் எதுவும் நிற்காமல் சென்றுவிட்டன.

    சிறிது நேரம் கழித்து, ஒரு டாக்ஸி ஓட்டுநர் நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால், ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது, வெங்கடரமணன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்தவருக்கு ஐந்து வயது மகனும் 18 மாத மகளும் உள்ளனர்.

    சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.
    • ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    இதற்கிடையே சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோர் டிசம்பர் 11 அன்று தாய்லாந்து போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டு புக்கெட்டில் உள்ள தடுப்பு மையதில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தியாவுக்கு நாடுதாடப்பட்டனர்.

    டெல்லி விமான நிலையத்தில் காவலில் உள்ள இருவரும் காட்டும் புகைப்படத்தை கோவா காவல்துறை வெளியிட்டுள்ளது.

    கோவா போலீஸ் குழு அவர்களை விமான நிலையத்தில் முறையாகக் கைது செய்தது. இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
    • மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

    பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    இதில் ராஜஸ்தானில் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் கூறுகையில், " ராஜஸ்தானில் 5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை. இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.

    அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்" என்று தெரிவித்தார்.

    அதேவேளை நேற்று வெளியிடப்பட்ட மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

    அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும்.
    • மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.

    இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 நாள் வேலைத்திட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக, மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமை ஏற்படும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது.

    லக்னோ:

    இந்தியா-தென் ஆப்பி ரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் விலகியுள்ளார். கடந்த ஆட்டத்திலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    31 வயதான ஷாபாஸ் அகமது 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நாளைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் 3-வது போட்டியில் அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் கடந்த போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் 34 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற மெஸ்ஸி தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
    • அதன்பின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    கொல்கத்தா:

    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக 13-ம் தேதி இந்தியா வந்தார்.

    முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற அவர் தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரசிகர்கள் முண்டியடித்ததால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.

    இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர், தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைதுசெய்தனர்.

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.

    ×