என் மலர்

    உண்மை எது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) பயிற்சி முறையை கற்பித்ததாகவு இந்திரஜா வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.

    நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்திரஜாவிற்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    திருமணத்திற்கு முன்பு பிகில், விருமன் படங்களில் நடித்துள்ள இந்திரஜா, திருமணத்திற்கு பின்பு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை பிறந்த பிறகு குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துவது குறித்து யூடியூப், இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வருகிறார். .

    அண்மையில், அவரின் 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) என்ற பயிற்சி முறையை கற்பித்ததாகவும், அது குழந்தைக்கு அறிவுத்திறனை வளர்க்க உதவும் என்றும் கூறி வீடியோ ஒன்றை இந்திரஜா பதிவிட்டிருந்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி, குழந்தையை அவர்களாகவே வளரவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.

    நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து இந்திரஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து 'உங்கள் பாண்டியம்மா' என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விசயங்களை செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், அதை பின்பற்ற வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் உண்மை சரிபார்ப்பு அமைப்பு FACT CHECK செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.

    தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.

    இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.

    தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.

    தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.

    அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.

    தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

    மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் "RIGHT BRAIN EDUCATION" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

    தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டது.
    • சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இதற்கிடையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

    சமீபத்தில் 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ, ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், PIB உண்மைச் சரிபார்ப்புத் துறை இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

    சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இந்த வதந்திக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில்,ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை ஏடிஎம்கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இது ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.

    பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
    • உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானுடன் உளவு பார்த்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து தேச துரோக சக்திகளுடன் ராகுல் தொடர்பில் உள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை தற்போது வெளியாகி உள்ளது.

    பல உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் ராகுல் மற்றும் ஜோதி மல்ஹோத்ராவின் புகைப்படங்களை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று அறிவித்துள்ளன.

    கூகிள் படத் தேடலின் படி, பல ஊடகங்கள் 2017 இல் அசல் புகைப்படத்தை வெளியிட்டன. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், ராகுலுடன் இருந்த நபர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அதிதி சிங் என்பது தெரியவந்தது.

    வைரலாகும் புகைப்படங்களில் ஜோதி மல்ஹோத்ரா அணிந்திருக்கும் அதே சேலையை அதிதி சிங் அணிந்திருப்பதைக் காணலாம். அவர்களும் அதே போஸில் காணப்படுகிறார்கள். பின்னணியில் இருப்பவர் கூட மாறவில்லை.

    ராகுல் மற்றும் அதிதி சிங் இருக்கும் புகைப்படம் பல வருடங்களுக்கு முந்தையது. இந்தப் புகைப்படத்தை அவர் 2017 இல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

    அதிதி சிங் ரேபரேலியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். 2021 இல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் ரேபரேலி சதார் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். ராகுல் காந்தியுடன் ஜோதி மல்கோத்ரா இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இதுபோன்று போலியாக பரபரப்படுகின்றன. 

    பாகிஸ்தானுடன் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    நாட்டைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் டேனிஷ் மே 13 அன்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

    உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.
    • வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட "188 வயது முதியவர்" எனக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோ கிட்டத்தட்ட 30 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

    இது தொடர்பான பதிவில், "இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது. பைத்தியம் பிடித்தது," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

     


    24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள் முதியவருக்கு நடக்க உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதியவர், கூன்விழுந்த நிலையில் வெள்ளை தாடியுடன், தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.

    இந்த வீடியோ பற்றிய இணைய தேடல்களில், உண்மையில் இந்த வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 110 வயது ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு இந்து மத துறவி என்று கூறப்படுகிறது. இதே தகவல் இந்த ஆண்டு ஜூலை மாதம் சில தனியார் செய்தி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த செய்தியின் படி, வீடியோவில் உள்ள நபர் சியாராம் பாபா என்றும் அவருக்கு வயது 109 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.

    புதுடெல்லி:

    ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.

    2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.

    கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம்.
    • இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்.

    புதுடெல்லி:

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரெயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவற்றுக்கு ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இ-டிக்கெட் எடுக்கலாம்.

    ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை.
    • நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

    90-க்களில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது. தனது கம்பீர குரலால் அறியப்படும் அப்துல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது. அப்துல் ஹமீது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று முதல் இன்று வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து நான் என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

    சிலர் என் குரலை கேட்டு கதறி அழுததை கேட்டேன். என்னால் அதை தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தேன் என்று நினைத்துக் கொண்டேன் என்று பேசினார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.
    • தமிழ்நாடு கவர்னர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.

    சென்னை :

    கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு கவர்னர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது,

    "குலதெய்வவழிபாட்டை தடை செய்ய வேண்டும்!" தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்! கவர்னர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

    இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை கவர்னர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையைஉருவாக்குகிறது.

    இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கவர்னர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.

    இந்தப் பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக்கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
    • 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.

    இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.

    டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லையை கடக்க முயலும் மக்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி முன்னேறினர்
    • 25 அடி உயர முட்கம்பியை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்தனர்

    கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பாலஸ்தீன மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளை கைகளில் வைத்திருக்கும் ஒரு கும்பல், கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் எல்லை பகுதியை கடந்து உள்ளே செல்ல முயல்வது தெரிந்தது. அந்த வீடியோவுடன் இணைக்கப்பட்ட செய்தி குறிப்பில் பாலஸ்தீனத்தை காக்க இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் இஸ்ரேலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது.

    உண்மை என்னவென்றால் இதில் காணப்படும் சம்பவம் தற்போது இஸ்ரேல்-காசா போர் நடைபெறும் காலகட்ட சம்பவமே அல்ல.

    2021 வருடம், லெபனான் நாட்டை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா பகுதி மக்களின் உரிமைகளுக்காக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள 25 அடி உயர முட்கம்பி வேலியை பல உபகரணங்களால் அறுத்து, இஸ்ரேலி எல்லைப்படை வீரர்கள் மேல் கற்களை எறிந்து, கையெறி குண்டுகளை வீசி உள்ளே நுழைய முயற்சித்த போது எடுக்கப்பட்டது.

    2021ல் நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக 2023 அக்டோபர் மாத சம்பவமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×